Saturday, December 21, 2013

தொண்டு செய்! தொண்டு செய்! தொண்டு செய்!



தொண்டு செய்!
By காஞ்சி மகாபெரியவர்






ராமாயண அணில் நமக்கெல்லாம் முன்னுதாரணம். அத்தனாம் பெரிய úஸது பந்தத்தில், "நாம் அல்ப ஜந்து, என்ன பெரிய ஸஹாயம் பண்ண முடியும்?' என்று அது நினைத்ததா? அது பண்ணின சேவை ராமருக்கு என்ன உபகாரம் பண்ணிற்றோ பண்ணவில்லையோ, அதற்கு பெரிய உபகாரம் பண்ணி விட்டது. ஸ்ரீராமரின் கருணையை, கர ஸ்பரிசத்தை ஸம்பாதித்துத் தந்துவிட்டது.




இப்படி, "நாம் என்ன பண்ணிக் கிழிக்கப் போகிறோம்?' என்று ஒதுங்கியில்லாமல், நம்மாலான தொண்டு செய்தால், மற்றவருக்கு நம்மால் நல்லது நடந்தாலும் நடக்காவிட்டாலும் நமக்கு ஈச்வரப் பிரஸாதம் கிடைத்து சித்தசுத்தி லபித்துவிடும்.

No comments:

Post a Comment