Thursday, October 11, 2012

இடியாப்பம் - தேங்காய் பால்


இடியாப்பம்  - தேங்காய் பால்

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - 1/2 கிலோ
தேங்காய் துருவல் - 1/2 கப்
தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய்
சர்க்கரை - 1/4 கிலோ
ஏலக்காய் - 4
உப்பு - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1/4 தேக்கரண்டி

எப்படி செய்வது

 அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.  ஊறிய அரிசியை நன்றாக கழுவி அதனுடன் துருவிய தேங்காயைப் போட்டு மிக்சியில் நைசாக அரைத்தெடுக்கவும்  மாவுடன் உப்பு சேர்த்து கலக்கவும். பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி இட்லியாக வார்க்கவும். இட்லியை சூடு ஆறுவதற்குள் இட்டியாப்ப குழலில் இட்டு பிழிந்து எடுக்கவும்.






தேங்காய்ப்பால் செய்வோம்

தேங்காய் துருவல் , சர்க்கரை  ஒன்றாக சேர்த்து , கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து , தேங்காய்ப்பால் பிழிந்து எடுக்கவும் (வடிகட்டி) பின் மீண்டும்  தேங்காய் சக்கையை மிக்சியில் போட்டு அரைத்து  பால் வடிகட்டி எடுக்கவும் , இந்த பாலுடன் , சிட்டிகை உப்பு , ஏலக்காய்
சேர்த்து  இடியப்பத்துடன்  பரிமாறவும் ,







இப்டி ஒரு இடியாப்பம் தேங்காய் பால் செஞ்சா , தலைல இடியே விழுந்த கூட நான் எழுந்திருக்க மாட்டேன்

No comments:

Post a Comment