Friday, November 15, 2013

தினமும் ஒரு திருப்புகழ் - வழிபாடு மறவாமை

தினமும் ஒரு திருப்புகழ் - நாள் 5 - வழிபாடு மறவாமை


ராகம்: கௌளை / ஆரபி

தாளம்: ஆதி









நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்

நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்

மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக

மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே

தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை

செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய அரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே

எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுந டித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.


கருத்துரை:-சதா மறவாமல் முருக சிந்தனை செய்யும்
அறிவை அருள் புரிகின்றவர், விநாயகப் பெருமான்,
அத்தகைய அறிவை பெரும் பொருட்டு பெருமை
வளர்கின்ற யானை முகமும், ஒற்றைக் கொம்பும்
உரிய மலர்களைத் தூவி, உயர்ந்த சொற்களினால், துதி செய்து. கரங்களால் , காதுகளைப் பற்றி தோப்புக்கரணம்,
சிரசில் குட்டிக்கொண்டு, தாமரை மலர் போன்றும்
பரிபுரம் என்ற ஆபரணத்தை அணிந்ததுமாகிய திருவடிகளின்
அர்ச்சனையை, ஒருபோதும் மறக்க மாட்டேன்.


தொடரும் திருப்புகழ், ............ தொடர்ந்து .......வாருங்கள்

No comments:

Post a Comment