Thursday, November 21, 2013

இலை கொழுக் கட்டை


இலை கொழுக் கட்டை




 
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல ,பலநாட்கள் தேடியது 
ஒருநாள் எதிர் பாராமல் கிடைத்தால் இப்படிச் சொல்வார்கள் .இலை கொழுக்கட்டை பண்ண பூவரசு இலையைத்தேடினேன் .

நேற்று தற்செயலாக கடைக்குச் செல்லும் வழியில் ,காலில் சிவப்புநிற 
பூ ஒன்று தட்டுப்பட்டது .கையில் எடுத்து பார்த்தால் அது பூவரசம்பூ .
அண்ணாந்து பார்த்தால் பூவரசமரம் .உடனே எனக்கு கிழக்கே போகும் 
ரயில், பாட்டு நாபகத்துக்கு வந்தது .

"பூவரசம்பூ பூத்தாச்சு ,பொண்ணுக்கு சேதி வந்தாச்சு ."

எனக்கு கொழுக்கட்டை பண்ணச்சொல்லி சேதி வந்தாச்சு கொஞ்சம் இலைகள் பறித்துக் கொண்டேன் .


பச்சரிசியை ஊறவைத்து மாவாக்கி அதோடு வெல்லம் ,ஏலப்பொடி,துருவிய தேங்காய் கொஞ்சம் சேர்த்து ,தளர்வாகப் பிசைந்து ,சிறிய வட்டங்களாகத் தட்டி சுத்தம் செய்த இலைகளில் வைத்து மூடி ,ஆவியில் வேகவைத்து எடுத்தேன் .
சுவைத்து பார்த்ததும் காவேரி போல பொங்கியது மனசு .

No comments:

Post a Comment