Friday, November 22, 2013

வெள்ளைக்கறி (தேங்காய் குழம்பு )



வெள்ளைக்கறி (தேங்காய் குழம்பு ) By Velammaal Gurusamy


 






இன்று எங்கள் வீட்டில் சிம்பிளா கிராமத்து சமையல் .
அதுதான் வெள்ளைக்கறி .

திருநெல்வேலி மாவட்ட கிராமத்து மக்களின் சிறப்புக் குழம்பு இது .
இதோடு அவர்கள் முழு கறுப்பு உழுந்தையும் வேவைதிருப்பார்கள் இந்தபருப்பையே சாதத்தில் போட்டு பிசைந்து குழம்பையையும் ஊற்றிக்கொள்வார்கள் . இதுஒரு தனி சுவை. எந்தபொரியலாக 
இருந்தாலும் இதற்கு சூட்டாகும் .

எங்கள் வீட்டில் எல்லோருமே இந்த குழம்பின் அடிமைகள் .

இதோகுழம்பின் செய்முறை :_

உரித்த சின்ன வெங்காயம் ,
கீறிய மிளகாய் ,
வெட்டிய முருங்கைக்காய் துண்டுகள் ,
தக்காளி துண்டுகள் ,
தேவையான புளிக் கரைச்சல் ,
உப்பு ,
மஞ்சாள்பொடி ,
வத்தல்பொடி ,
துருவி சீரகம் ,

பூண்டு வெங்காயம் வைத்து அரைத்த தேங்காய் விழுது 
இவையே இந்த குழம்பிற்கு தேவை .

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,உழுந்து ,கறிவேப்பிலை 
போட்டு தாளித்து ,வெங்காயம் ,மிளகாய் .இவற்றோடு காய்களையும் 
வதக்கி ,சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவேண்டும் .

புளிக்கரைசலோடு உப்பு ,மஞ்சள்பொடி ,வத்தல்பொடி ,அரைத்த தேங்காய் விழுதையும் கரைத்து வெந்த காயுடன் ஊற்றி கொதிக்க விடவேண்டும்.

வெள்ளைக்கறியின் மணம் விருந்தினரையும் வரவழைக்கும் .

 இது ஒரு பருப்பு இல்லாத சாம்பார் 
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் 
வெள்ளை கறி . 

சாம்பார் என்ற பெயர் பண்டைய சமையல் வழக்கத்தில் இல்லை 
அண்மைக்காலத்தில்  நாம் கொண்ட பெயரே சாம்பார் 

No comments:

Post a Comment