வெள்ளைக்கறி (தேங்காய் குழம்பு ) By Velammaal Gurusamy
அதுதான் வெள்ளைக்கறி .
திருநெல்வேலி மாவட்ட கிராமத்து மக்களின் சிறப்புக் குழம்பு இது .
இதோடு அவர்கள் முழு கறுப்பு உழுந்தையும் வேவைதிருப்பார்கள் இந்தபருப்பையே சாதத்தில் போட்டு பிசைந்து குழம்பையையும் ஊற்றிக்கொள்வார்கள் . இதுஒரு தனி சுவை. எந்தபொரியலாக
இருந்தாலும் இதற்கு சூட்டாகும் .
எங்கள் வீட்டில் எல்லோருமே இந்த குழம்பின் அடிமைகள் .
இதோகுழம்பின் செய்முறை :_
உரித்த சின்ன வெங்காயம் ,
கீறிய மிளகாய் ,
வெட்டிய முருங்கைக்காய் துண்டுகள் ,
தக்காளி துண்டுகள் ,
தேவையான புளிக் கரைச்சல் ,
உப்பு ,
மஞ்சாள்பொடி ,
வத்தல்பொடி ,
துருவி சீரகம் ,
பூண்டு வெங்காயம் வைத்து அரைத்த தேங்காய் விழுது
இவையே இந்த குழம்பிற்கு தேவை .
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,உழுந்து ,கறிவேப்பிலை
போட்டு தாளித்து ,வெங்காயம் ,மிளகாய் .இவற்றோடு காய்களையும்
வதக்கி ,சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவேண்டும் .
புளிக்கரைசலோடு உப்பு ,மஞ்சள்பொடி ,வத்தல்பொடி ,அரைத்த தேங்காய் விழுதையும் கரைத்து வெந்த காயுடன் ஊற்றி கொதிக்க விடவேண்டும்.
வெள்ளைக்கறியின் மணம் விருந்தினரையும் வரவழைக்கும் .
இது ஒரு பருப்பு இல்லாத சாம்பார்
உள்ளத்தை கொள்ளை கொள்ளும்
வெள்ளை கறி .
சாம்பார் என்ற பெயர் பண்டைய சமையல் வழக்கத்தில் இல்லை
அண்மைக்காலத்தில் நாம் கொண்ட பெயரே சாம்பார்
No comments:
Post a Comment