Friday, November 22, 2013

அவியல் (திருநெல்வேலி )



அவியல் (திருநெல்வேலி )  By:- Velammal Gurusamy

அவியல் பெயர் காரணம் பாருங்கள் 
கைகள் பலவற்றை ஒன்றாக போட்டு 
அவித்து (வேகவைத்து) செய்யப்படும் 
ஒருவிதமான குழம்பு 

இந்த அவியல் (குழம்பு) பலவிதமான 
சுவைகளில் செயல் முறைகளில் உண்டு 

தஞ்சாவூர் அவியல் 
திருநெல்வேலி அவியல் 
கேரளா அவியல் 
மலபார் அவியல் 
மைசூர் அவியல் 

அடிப்படை செயல் முறை ஒன்றாக இருந்தாலும் 
சில சிறப்பம்சங்களை கொண்டு அந்த அந்த ஊர் வாழ் 
மக்களால் தயாரிக்கப்பட்டு பிரசித்தி பெற்றதால் அந்த 
ஊர்களின் பெயர்களை தாங்கி இவை பிரகாசிக்கின்றன 
என்றால் அது மிகையல்ல 






கல்யாணபந்தியில் முக்கிய இடம் வகிப்பது இந்த அவியல் தான் .இதை சுவைக்காதவர் யாரும் இருக்க முடியாது .

நான்தெரிந்து கொண்ட அவியல்கள் இரண்டு வகை .ஒன்று தமிழ்நாட்டு அவியல் ,மற்றது கேரள அவியல் .தமிழ்நாட்டு அவியலில் தாளிப்பு உண்டு .கேரள அவியலில் இல்லை அதோடு வெறும் நாட்டு காய்களையே இதில் சேர்ப்பார்கள்.புடலை .பூசணி இவற்றை சேர்க்க மாட்டார்கள் கேரள அவியலில் இவை இடம்பெறும் .

இன்று எங்கள் மதிய உணவில் அவியல் இடம்பிடித்திருக்கிறது .இதில் நான் பொடியாக நறுக்கிய 
சேனை ,வாழை ,கத்தரி ,காரட் ,உருளை அவரை ,பீன்ஸ் சேர்த்திருக்கிறேன் கொதிக்கும் தண்ணீரில் இதை வேகவிட்டு ,துருவிய தேங்காய் ,பச்சைமிளகாய் .சீரகம் ,சிறிது சின்னவெங்காயம் ,பூண்டு சேர்த்து
அரைத்து வெந்தகாயுடன் சேர்த்து உப்பு,மஞ்சள்பொடி ,கறிவேப்பிலை ,கொஞ்சம் தயிர் (காயுடன் மாங்காய் சேர்த்தால் தயிர் வேண்டாம் )சேர்த்துனன்கு கிளறி கடாயில் எண்ணெய்விட்டு கறிவடாம் இருந்தால் உதிர்த்து போட்டு தாளிக்கலாம் ,நான் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சிவக்க வறுத்து கடுகு ,உளுந்து போட்டு தாளித்திருக்கிறேன் .

இப்போ அவியல் பந்திக்கு தயார் .

No comments:

Post a Comment