Wednesday, November 20, 2013

துவரம் பருப்பு சாதம் ..

துவரம் பருப்பு சாதம் ..

சாதங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் 
குழந்தைகளையும் கட்டிப்போடும் இது ஒரு வித 
புது சாதம் ..... 

சமைச்சு பாருங்க , சரின்னு சொல்லுங்க






சத்துநிறைந்த முருங்கைக் கீரையை சாப்பாட்டில் அதிகமாக 
பயன்படுத்துங்க .அப்படீன்னு மருத்துவம் சொல்லுது .
முருங்கைக் கீரையை தனியாக சமைத்தால் குழந்தைகளை 
சாப்பிடவைப்பது கடினம் .அதற்கு ஒரேவழி சாதத்தோடு சேர்த்து சமைப்பதுதான் .அந்தவகையில் இந்தசாதம் உற்றதுணை புரிகிறது .குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சாதமாக இது அமைந்து விட்டது .

இதைச் சமைக்க 

 உரித்த சின்ன வெங்காயம்,
பச்சைமிளகாய்,
இரண்டு பெரிய முருங்கைக்காய்,
இரண்டு கைப்பிடி முருங்கைக்கீரை,
ஒருகப் அரிசி.
கால்கப் துவரம் பருப்பு,
தேவையான புளி ,உப்பு, 
சாம்பார் பொடி,
மஞ்சள்பொடி,
பெருங்காயப்பொடி
 
துருவிய தேங்காய் ஒருமூடியோடு 
அரைக்க சிறிது சீரகம் ,வெங்காயம் ,
பூண்டு எடுத்துக் கொண்டேன்

வெங்காயம் மிளகாயை வதக்கி ,அரிசி பருப்பு ,முருங்கைக்காய் ,கீரை மஞ்சள்பொடி ,பெருங்காய பொடியுடன் குக்கரில் வேகவைத்தேன்.

புளியைகெட்டியாகக் கரைத்து ,அரைத்ததேங்காய் விழுது ,உப்பு ,வத்தல்போடி கலந்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு ,உழுந்து ,கறிவேப்பிலை தாளித்து அதைஊற்றி கொதிக்கவைத்தேன் .நன்கு கெட்டியானதும் வெந்த சாதத்தில் கொட்டி கிளறினேன் .துவரம் பருப்பு சாதம் தயாரானது .

தொட்டுக்க பொரித்த அப்பளமும் தயிர்பச்சடியும் வைத்தேன் .குழந்தைகள் ஓடிவரும் காலடிச்சத்தம் கேட்கிறது .பரிமாறப் போகிறேன்.

முந்தானை முடிச்சு போட மட்டும் முருங்கைக்காய் இல்லை 
குழந்தைகளையும் கட்டி இழுத்து சாப்பிடவும் வைக்கும் 

No comments:

Post a Comment