Thursday, November 14, 2013

தினமும் ஒரு திருப்புகழ் அறிவோம் - திருவடி பெற



தினமும் ஒரு திருப்புகழ் அறிவோம் - பாடல் (4)






ராகங்கள்: அடாணா/பிலஹரி

தாளம் : ஆதி

விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண ...... மெனவேதான்

விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் ...... அறியாதே

கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி ...... வறிதாய

கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர ...... அருள்வாயே

இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே

இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம ...... முறைகூற

அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் ...... அவரோட

அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை ...... முகவோனே.

கருத்துரை:- அறிவை அருளுகின்ற
ஆணைமுகமுடைய விநாயக மூர்த்தியே!
நஞ்சுடன் கூடிய , தேவர் ஆயுதத்தையும்,
சூலத்தையும், அர்ச்சுனன் பாணத்தை ஒத்த
கண்களையும் உடைய மாதரின் சாகஸத்
தொழிலில் சேர்ந்து , போகத்தில் மூழ்கி
விடாமல், உமது மலரடி சேர அருள் புரிவீர்


தகவல் : திருப்புகழ்த் திரட்டு, நன்றி 

No comments:

Post a Comment