தகவல்:மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்
காஞ்சி ஸ்ரீமடம் பாலு மாமா
ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் தனிப்பட்ட வழிபாட்டு
முறைகள் வழக்கத்திலிருக்கும்.
அந்த க்ஷேத்திரத்தில் இருப்பவர்களுக்கு கூடத்தெரியாத
பல செய்திகள் பெரியவாளுக்குத் தெரிந்திருக்கும்
இராமேஸ்வரத்திலிருந்து வந்தார், ஒரு புரோகிதர் , 3
தலைமுறைகளாக அந்த ஊரிலேயே இருந்து வருவதாக
சொன்னார்.
" ராமநாதஸ்வாமி கோவிலில் நடராஜாவைப்
பாத்திருக்கியோ?"
"பாத்திருக்கேன், சேவார்திகளை அழைச்சுண்டு போய்
காட்டி இருக்கேன்."
"நடராஜாவுக்கு 7 திரைகள் உண்டோ?"
புரோகிதருக்கு குழப்பம் வந்துவிட்டது , என்ன பதில்
சொல்வதென்று புரியவில்லை
பெரியவா சொன்னார்கள்:
திருவாதிரை அன்னிக்கு, 7 படுத்தாக்கள் திரையாகப்
போட்டு, நடராஜருக்கு பூஜை செய்வார்கள், ஏழு திரை
விலகியதும், நடராஜாவை தரிசிக்கலாம்.....சரி அந்தக்
கோவிலில் எத்தனை நடராஜர் இருக்கு?"
ரமேஸ்வரத்தாருக்கு கொஞ்சம் நடுக்கம்
"நான் ஒரு நடராஜாவைத் தான் பாத்திருக்கேன் "
"மூணு நடராஜர் இருக்கு !... போய்ப் பார்....."
"பார்க்கிறேன்....."
" ராமேஸ்வரம் கோவிலில் குருவாயுரைப் போல் செக்கு
ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது வழக்கமா?"
" ஆமாம்" என்று ஒரு போடு போட்டார், வந்தவர்.
" ராமேஸ்வரத்தில் செக்கே கிடையாது! அந்த க்ஷேத்திரத்து
ஸ்வாமி, மண்ணைப் பிடித்து வைத்து உருவாக்கப்பட்டவர்
செக்கு ஆட்டக்கூடாது என்று ஒரு ஐதீகம்
பின்னர், அந்த புரோகிதர் மனதில் ஒரு குறை இருக்கக் கூடாது
என்பதற்காக , குடும்ப க்ஷேமலாபங்கள் விசாரித்து பிரசாதம்
கொடுத்தார்கள் பெரியவா !!!!
No comments:
Post a Comment