Tuesday, April 23, 2013

சித்ரா பவுர்ணமி: பாவம் போக்கும் சித்ரகுப்தன் வழிபாடு

நாளை சித்ரா பவுர்ணமி: பாவம் போக்கும் சித்ரகுப்தன் வழிபாடு






சித்ரா பவுர்ணமி நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவார்கள். சித்திரை நட்சத்திரம் பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன்பின் வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் எனப் பெயர். சித்திரை மாதத்தில் பவுர்ணமி அன்று சிவபெருமாள்- பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் சித்திரைகுப்தன். மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதபடைக்கப்பட்டவர் சித்திர குப்தனை வேண்டிக் கொண்டு பெரும் பாலும் பெண்களே விரதம் மேற் கொள்கின்றனர். சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர குப்தனைப் போல் மாக்கோலம் போட்டு ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர்.




பாவங்களிலிருந்து விடுபடவும் நரகத்திற்கு போகாமல் இருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இரவு நேரத்தில் சித்தரபுத்திர நாயனார் கதையும் சொல்வதுண்டு திருவண்ணாமலையிலும் காஞ்சிபுரத்திலும், சித்திரகுப்தனுக்கத் தனியாக ஒரு கோயில் உள்ளது. சித்ராபவுர்ணமி தினத்தில் பூஜையும், புறப்பாடும் உற்சவமும் நடந்து வருகிறது. ஆதி நாளிலிருந்தே தமிழர் கொண்டாடும் திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி நடைபெறும் சித்திரை திருவிழா தனிச்சிறப்புடையது.




தென்னாட்டு கோயில்களில் குறிப்பிடத்தக்க மதுரை கோயிலில் அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். சித்ராபவுர்ணமி அன்று இங்கு தரிசனம் செய்தால் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்! அதுமட்டுமல்லாமல் அரவாணிகள் (திருநங்கைகள்) கொண்டாடும் கூத்தாண்டவர் திருவிழாவும் சித்ரா பவுர்ணமி அன்று தான் நடக்கிறது. குற்றாலம் செண்பகாதேவி அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடும் நடக்கும். இதில் கலந்து கொள்ள தென் மாவட்ட பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படும் காட்சியைக் காண கண்கோடி வேண்டுமே!


சித்ரா பவுர்ணமியில் சுத்தினா ஆண்டு முழுக்க சுத்தினா மாதிரி




ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசி வீடுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் மேஷம், ரிஷபம் என பெயர்கள் உண்டு. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சூரியன் ஒவ்வொரு ராசியில் பிரவேசிப்பார். அந்த சூரியனை சுற்றி தினக்கோளான சந்திரன் வலம் வருவார். அப்படி வரும்போது சூரியன் இருக்கும் ராசிக்கு சந்திரன் வரும்போது பவுர்ணமி திதி உதயமாகிறது. இந்துக்களின் ஆன்மிக வழிபாடுகளில் பவுர்ணமி நாள் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் சித்திரை மாதம் வரும் பவுர்ணமி மிகவும் விசேஷம். அதுவே சித்ரா பவுர்ணமியாக கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி பற்றி பல்வேறு புராண கதைகள் உள்ளன. முழுமையாக இருந்த சந்திரன் தட்சனின் சாபத்தால் தேயத் தொடங்கினான். சிவபெருமான் அவனுக்கு அருள் புரிந்து, தேய்ந்த பிறையை தன் தலையில் சூடி சந்திரனை காத்தருளினார். அதனால் சிவனுக்கு ‘சந்திரசேகரர்’ என்ற பெயரும் ஏற்பட்டது.

அதே நேரத்தில் சந்திரனின் ஆணவம், அகந்தையை அழிப்பதற்காக அவனை தேயச் செய்து பின்னர் பிறை சந்திரனை சூடி, பாலச்சந்திரனாக விநாயகர் காட்சி தந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்று திருக்கடையூர். தம்பதிகள் 60வது திருமண விழாவை இங்கு கொண்டாடுவது வழக்கம். சரபோஜி மன்னர்கள் காலத்தில் இங்கு பட்டர் ஒருவர் வசித்து வந்தார். இங்கு கோயில் கொண்டிருக்கும் அபிராமி அம்மனை நினைத்து பாடல்கள் புனைந்து வழிபட்டு வந்தார். ஒரு அமாவாசை தினத்தன்று கோயிலுக்கு வந்தார் தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி. அந்த நேரத்தில் அம்மனை நினைத்து தியானத்தில் இருந்த பட்டரை பார்த்தார். அவர் தன்னை மதிக்காமல் அமர்ந்து இருப்பதாக நினைத்து மன்னர் கோபமடைந்தார். பட்டரிடம் போய், ‘இன்று என்ன திதி?’ என்று கேட்டார். அம்மனின் ஒளி நிறைந்த முகத்தை மனதில் பதித்திருந்த பட்டர் அதே ஞாபகத்தில் தன்னையறியாமல் ‘பவுர்ணமி’ என்றார்.

இதைக் கேட்ட மன்னர், ‘என்னை மதிக்கவும் செய்யாமல், திதியையும் மாற்றி சொல்கிறாரே’ என்று மேலும் கோபமடைந்தார். ‘நீ சொன்னதுபோல முழு நிலவு இன்று தோன்றாவிட்டால் உனக்கு மரண தண்டனை’ என்றார். அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தார் பட்டர். மன்னர் கேட்டதற்கு தான் தவறாக பதில் அளித்ததையும் மன்னர் தண்டனை அளித்திருப்பதையும் அறிந்து கலங்கினார். அபிராமி அம்மனை நோக்கி அந்தாதி பாடல்களை பாடத் தொடங்கினார். பாடி முடித்ததும் காட்சி தந்த அன்னை அபிராமி, தனது காதணியை வானில் வீசி முழு நிலவை தோன்றச் செய்தாள் என்கிறது திருத்தல வரலாறு. தமிழகத்தின் அனைத்து ஆலயங்களிலும் சித்ரா பவுர்ணமி பூஜைகள், வழிபாடுகள் சிறப்பாக நடக்கின்றன. அம்மன், அம்பாள் ஸ்தலங்களில் இரவு நேர பூஜையும், சந்திர தரிசனமும் பிரசித்தம். மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் திருவிழா உலகப் புகழ் பெற்றது.

அழகர் எந்த வண்ணத்தில் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த ஆண்டின் பலாபலன்கள் அமையும் என்பது ஐதீகம். பச்சைப்பட்டு உடுத்தி இறங்கினால் பயிர், பச்சைகள் செழிப்படைந்து விவசாயம் செழிக்கும். நல்ல மழை வளம் இருக்கும் என்பது அனுபவபூர்வமான உண்மை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் விசேஷமாகும். நம் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் சித்ரகுப்தனுக்கு உகந்த நாளாகவும் சித்ரா பவுர்ணமி கருதப்படுகிறது. ‘நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள், பிழைகளை பொறுத்து இனி பாவங்கள் செய்யாமல் தடுத்து காக்க வேண்டும்’ என்ற பிரார்த்தனையுடன் சித்ரகுப்தனை சித்ரா பவுர்ணமி நாளில் வணங்குவது சிறப்பு. காஞ்சிபுரத்தில் கர்ணகி சமேத சித்ரகுப்தனுக்கு தனி ஆலயம் உள்ளது. ஜாதகத்தில் சந்திரன் நீச்சம் 6, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் இருப்பவர்கள், சந்திர திசை நடப்பவர்கள், மனசஞ்சலம், மனகுழப்பம் உள்ளவர்கள் சித்ரா பவுர்ணமி அன்று சந்திர தரிசனம் செய்து வழிபட, பாதிப்புகள் நீங்கி சகல யோகங்களும் உண்டாகும்.

சந்திரகிரகணம்

26ம் தேதி அதிகாலை 1.24 மணி முதல் 1.51 மணி வரை சந்திரகிரகணம். அது முடிந்ததும், தி.மலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி நடக்கும். அதை தொடர்ந்து பள்ளியறை பூஜை முடிந்ததும், சிறிது நேரம் மட்டும் நடை சாத்தப்படும். வழக்கம்போல அதிகாலை
4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.


No comments:

Post a Comment