Saturday, April 13, 2013

புத்தாண்டு வாழ்த்து


புத்தாண்டு வாழ்த்து 

விழித்திரை மலர்ந்தது வைகறை புலர்ந்தது
நித்திரை மலர்ந்து சித்திரை பிறந்தது
இத்திரையதனில் முத்திரை பதித்திட்ட
முற்பகல் வாழ்க்கை கண்முன்னே தோன்ற
'நந்தன'த்திர்க்கு வந்தனம் செய்து விடை கொடுப்போம்
'விஜய'த்தை ஜெயம் கொடுக்க வரவேற்ப்போம்

சித்திரை பெண் சிரித்து சிரித்து வந்தாள்
வைகாசி தீயாய் கொதிக்க!, ஆறவைக்க
ஆனிவருமே காணி நிலம் இருந்தாலும்
ஆடி பட்டம் தேடி விதைக்க ஆடி வரும்
ஆவணியில் தாவணிகள் சேலையாய் மாற
புரட்டாசி புரட்டி எடுக்க , அடைமழை தரும்
ஐப்பசி வருமே திருமணநாள் முடிக்க
கார்த்திகை தருமே வண்ண வண்ண தீப விழா
மார்கழி மாதமோ மாதவன் புகழ் பாட
தை பிறந்தால் மீண்டும் நல் வழி பிறக்கும்
மாசியில் நோன்பிருந்தால் உயிர் காக்கும்
பங்குனியில் நாம் பெரும் பலனோ கோடி கோடி

வரவேற்ப்போம் விஜயத்தை ஜெயம் பல பெறவே

No comments:

Post a Comment