Tuesday, January 1, 2013

தொண்டு



தினசரி தியானம்



தொண்டு

ஆருயிர்க்கெல்லாம் அன்புடன் தொண்டு புரியும் ஆர்வத்தை அண்ணலே, எனக்கு நீ நல்குவாயாக.


சேவை செய்பவன் மனத்தை விட்டு வேற்றுமை விலகிவிடுகிறது. மன்னுயிரைத் தன்னுயிர் போல் அவன் கருதுகிறான். வேற்றானாக இருந்தவன் சேவையின் மூலம் தனக்கு உற்றவன் ஆய் விடுகிறான். அங்ஙனம் ஒற்றுமை நிலைநாட்டப்படுகிறது. ஐக்கிய உணர்ச்சி வளர்கிறது. அதனின்று நல்லறிவு ஓங்குகிறது. தொண்டு என்னும் பெருவாய்ப்பு எல்லார்க்கும் சொந்தமானது. அதைப் பயன்படுத்தாதவன் வாழ்ந்தும் வாழாதவனாகிறான். மனமே, சேவையே உன்னை மேலோன் ஆக்குகிறது.


உண்டு உடுத்துப் பூண்டு இங்கு உலகத்தார் போல்திரியும்
தொண்டர்விளையாட்டே சுகங்காண் பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment