Friday, November 2, 2012

மின் விளக்கு



தினசரி தியானம்



மின் விளக்கு

உன்னைச் சார்ந்திருப்பதாகலேயே ஒண் பொருளே, நான் உயிர் தரித்திருக்கிறேன்.


இருட்டறையில் இருக்கும் மின்விளக்கு மற்ற பொருள்களைப் போன்று மறைந்து கிடக்கிறது. ஆனால் அதனுள் மின்சக்தி வந்ததும் அது சுடர் விளக்கு ஆகிறது. ஜோதி சொரூபமாகிய அது அறையில் உள்ள பொருள்களையெல்லாம் விளக்குகிறது. அங்ஙனம் இறைவன் அருளால் ஜீவாத்மாக்கல் தங்களை உணர்கின்றனர்; ஏனைய பொருள்களையும் பார்க்கின்றனர்.


யானேபொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே!
-மாணிக்கவாசகர்

No comments:

Post a Comment