Saturday, November 3, 2012

பயத்தம் (மாவு) உருண்டை



பயத்தம் (மாவு) உருண்டை 



பயத்தம் பருப்பு 2 கப் 

சர்க்கரை              2 கப் 

நெய்                      1 கப் 

ஏலக்காய்            5( பொடி செய்து கொள்ளவும்)



அடுப்பில் வாணலியில் மிதமான சூட்டில் கொஞ்சம் 
நெய் விட்டு அதில் பயத்தம் பருப்பை பொன்வறுவலாக 
வறுத்து மிக்சியில் போட்டு  நைசாக பொடி செய்து கொள்ளவும் 

சர்க்கரை மிக்சியில் தனியாக போட்டு நைசாக அரைத்துக்  
கொள்ளவும் .

பிறகு ஒரு பாத்திரத்தில்  பயத்தம் மாவு, சர்க்கரை , ஏலக்காய் 
சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டு கலந்து தேவையான 
அளவு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். 

உருக்கிய  நெய் சூடானதாக இருக்க வேண்டும் 




சுவையான பயத்தம் மாவு உருண்டை தயார் 


இதை ஒரு உருண்டையை அப்படியே வாயில் போட்டுக்கொண்டு 
பேச முற்பட்டால் வாயில் இருந்து உதிர்ந்த மாவு வெளியே 
அருகில் உள்ளவர் மேலே தெளிக்கும் , சிறு வயதில் இது ஒரு 
வேடிக்கை. 

No comments:

Post a Comment