Thursday, November 8, 2012

போதனா முறை





தினசரி தியானம்



போதனா முறை

எண்ணிறந்த ஜீவர்களாகத் தோன்றியிருக்கும் சச்சிதானந்த சிவமே, உனக்குப் பாடம் புகட்டுதல் என்னும் எண்ணம் என் உள்ளத்தினுள் புகுந்துவிடலாகாது.


பரதத்துவத்தைப் பழக்கத்தில் கொண்டு வருவதே நல்ல போதனா முறை. வெறும் பேச்சாளன் போதிக்கவல்லவனாகான். உண்மைக்கு ஒப்ப வாழ்கின்றவனது ஒவ்வொரு செயலும் வலிவு மிகப் படைத்தது; ஒவ்வொரு சொல்லும் உள்ளத்தை மாற்றியமைக்க வல்லது. நல்வாழ்வு சர்வகாலமும் பாடம் புகட்டும் போதனா முறையாகிறது.


காச்சச் சுடர்விடும்பொற் கட்டிபோல் நின்மலமாய்ப்
பேச்சற்றவரே பிறவார் பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment