தினசரி தியானம்
சக்தி பூஜை
நான் பொல்லாத சேய் எனினும் தாயாகிய நீ என்னைத் தள்ளுதல் நீதமோ? உன்னையன்றி எனக்குப் புகல் இடம் ஏது?
நாயின் வாஞ்சையை அறிகிறவன் தெய்வத்தின் கருணையை அறிகிறான். கருத்தரித்த நாள் முதல் காலமெல்லாம் தன் குழந்தைக்கென்றே வாழ்ந்திருப்பவள் தாய். அன்னை பராசக்தி உயிர்களைப் பரத்தினிடம் சேர்க்கும் வரையில் தனது கருணாகரக் கண்காணிப்பைச் செலுத்தி வருகிறாள்.
ஒன்றுமறியா இருளாம் உள்ளம் படைத்த எனக்கு
என்று கதிவருவது? எந்தாய் பராபரமே!
-தாயுமானவர்
No comments:
Post a Comment