தினசரி தியானம்
சிவ பூஜை
சிவபெருமானே எண்ணிறந்த ஜீவகோடிகளாக வடிவெடுத்து இலங்குகிறார் என்று உணர்ந்து அத்தனை வடிவங்களில் அவரைப் போற்றக் கற்றுக் கொள்வேனாக.
ஆண்டவனே ஆருயிர் வடிவங்களில் இலங்குகிறார். ஒவ்வோர் உயிரோடும் இணக்கம் கொள்ளும் போது அது இறவனோடு கொள்ளும் இணக்கம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் அந்த இணக்கம் தானாகவே நல்லிணக்கம் ஆய்விடும்.
எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பமுண்டோ
சித்துருவே இன்பச் சிவமே பராபரமே.
-தாயுமானவர்
No comments:
Post a Comment