Wednesday, November 7, 2012

நேர்மை





தினசரி தியானம்



நேர்மை

நேர்மை தவறிவிடின் திருவருளுக்கு அன்னியனாய்ப் புல்லியன் ஆய்விடுவேன், அந்தோ!


நேர்மையில் ஒழுகுகிறவன் மறைத்துவைப்பதற்கு ஒன்றுமில்லை. திருட்டுத்தனமாய் அவன் எதையும் செய்வதில்லை. பொருந்தாத ஆசைக்கு அவன் அடிமைப்படுவதில்லை யாதலால் அவன் நடக்கிறான்; நிமிர்ந்திருக்கிறான்; தெளிவுறப் பேசுகிறான்; நேரே முகத்தைப் பார்க்கிறான். அவனே நேர்மைக்கு விளக்கமாகிறான்.


இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
-திருக்குறள்

No comments:

Post a Comment