Thursday, November 22, 2012

சத்யசாய் பாபாவின் பிறந்த நாள் விழா

சென்னையில் சத்யசாய் பாபாவின் பிறந்த நாள் விழா




ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் சார்பில், பகவான் சத்ய சாய்பாபாவின், 87வது பிறந்த நாள் விழா, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் சார்பில், ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள, "சுந்தரம் இல்லத்தில், பகவான் சத்ய சாய்பாபாவின், 87வது பிறந்த நாள் விழாவையொட்டி, இம்மாதம், 17ம் தேதி முதல், பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இன்று காலை, 6:00 மணிக்கு, மங்கள இசையுடன் வழிபாடு ஆரம்பிக்க உள்ளது. இதை தொடர்ந்து, அபிஷேகமும், வேத பாராயணமும் நடக்க உள்ளது. 10:00 மணிக்கு, சகஸ்ரநாம அர்ச்சனையை தொடர்ந்து, நாராயண சேவா மற்றும் சத்ய சாய்பாபா வாழ்க்கை குறித்த, சிறப்பு வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட உள்ளது. மாண்டலின் சகோதரிகள், ஸ்ரீ உஷா, ஸ்ரீ ஷாவின் பக்தி இசை நடைபெற உள்ளது. மாலை வேத பாராயணம், பஜனையை தொடர்ந்து, மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவு பெற உள்ளது. பகவான் சத்ய சாய்பாபவின் பிறந்த நாளான, நாளை காலை, 5:00 மணிக்கு, ஓங்காரம், சுப்ரபாதம் இசையுடன் வழிபாடு ஆரம்பிக்க உள்ளது. அதை தொடர்ந்து, ரதோற்சவம் மற்றும் நாக சங்கீர்த்தம், அதையடுத்து வேத பாராயணமும் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, சகஸ்ரநாம அர்ச்சனையை தொடர்ந்து, நாராயண சேவா மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு, உதவிப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது. மாலை சத்ய சாய்பாபா வாழ்க்கை குறித்த சிறப்பு வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட உள்ளது.

இதை தொடர்ந்து, அருண் குழுவினரின் வாய்பாட்டு, பக்தி இசை நடக்க உள்ளது. மாலை, 5:30 மணிக்கு வேத பாராயணம், பஜனையை தொடர்ந்து, மங்கள ஆரத்தியுடன், விழா நிறைவு பெற உள்ளது.

No comments:

Post a Comment