Thursday, November 22, 2012

கலகலக்கும் கார்த்திகை , கல்யாண கார்த்திகை


கலகலக்கும் கார்த்திகை , கல்யாண கார்த்திகை 

சிவனின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து பிறந்த 
முருகனின் பிறந்ததினம் கார்த்திகை திருநாள் அதை 
நினைவுகூரும் விதமாக பொறி பொரித்து , உருண்டை 
பிடித்து அவனை வழிபடுவது தானே சிறந்தது 

வாருங்கள் நாமும் பொறி பொரித்து , உருண்டை பிடித்து 
வணங்கி , மகிழ்ந்து அனைவரையும் மகிழ்விப்போம் 

தேவை 

அவல் பொறி, நெல் பொறி 
வெல்லம் 
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கியது 
சுக்கு, ஏலக்காய் பொடி செய்தது 

கடையில் அவல்  பொறி , நெல் பொறி பொரித்து 
வாங்கிவிடவும் .



வெல்லத்தை  சுத்தம் செய்து பாகு தயாரிக்கவும் 
இளம் பாகு பதம் தேவை 


வெல்லப்பாகு சோதனை செய்யும் விதம் 




பொறியுடன் ஏலக்காய், சுக்கு பொடி சேர்க்கவும் , 



வெல்லப்பாகுடன் பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் 
சேர்த்து பின் வெல்லப்பாகை பொறியுடன் சேர்த்து நன்றாக

 
 கிளறி , உருண்டைகளாக பிடித்து விடவும் 


கார்த்திகைக்கு பொறி உருண்டை செய்து கலக்குவோமா 

1 comment:

  1. Dear Sir,You have copied the pictures from my site Sanctified Spaces. If you still want to use the pictures please kindly give credit to me.

    Thanx,
    Shalini

    ReplyDelete