தினசரி தியானம்
வைகறையில் துயில் எழு
இறைவா, உன்னைப் போற்றுதற்குரிய பிரம்ம முகூர்த்தத்தில் நான் உறங்கிக் கொண்டிருப்பது முறையோ!
சூரியோதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே பிரம்ம முகூர்த்தம் உச்சத்துக்கு வந்து விடுகிறது. அப்பொழுது தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அருள் துறையிலோ பொருள் துறையிலோ முன்னேற்றமில்லை. வைகறையில் விழித்தெழுந்திருப்பவர்க்கு எல்லாவித முன்னேற்றம் உண்டு.
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
-மாணிக்கவாசகர்
No comments:
Post a Comment