Sunday, November 18, 2012

சண்டையிடல்





தினசரி தியானம்



சண்டையிடல்

இறைவணக்கத்துக்கு நேரம் போதவில்லையே என்று ஏங்கியிருப்பவனுக்குப் பிறரோடு சண்டையிட நேரமெங்கே!


முற்றிலும் பரிபக்குவம் அடைந்திருப்பவன் மற்றவர்களோடு சண்டையிடுவதில்லை. பிறர் கூறும் கடுஞ்சொல்லை அவன் இன்சொல் கொண்டு எதிரழைக்கிறான். சினத்துக்கு அவன் உள்ளத்தில் இடம்கொடுப்பதில்லையாதலால் பிறர் சினம் அவன் முன்னிலையில் மாயமாய் மறைந்து போய்விடுகிறது.


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
-திருக்குறள்

No comments:

Post a Comment