Friday, November 16, 2012

உடலை அலங்கரித்தல்



தினசரி தியானம்



உடலை அலங்கரித்தல்

உடல் ஞாபகம் மறந்துபோகவும் பரபோதம் மேலோங்கவும் இறைவா, எனக்கு நீ அருள்புரிவாயாக.


உடல் பற்று வைத்திருப்பவனே உடலை அலங்கரிக்கிறான். பாபங்கள் அனைத்தும் உடல்பற்றினின்று உதிக்கின்றன. உள்ளம் பரிபக்குவம் அடையுமளவு உடலைப்பற்றிய எண்ணம் மறைந்துபோய் விடுகிறது. உடல் வாழ்க்கை வாழ்ந்திருக்கும் பொழுதும் உடலைப்பற்றி எண்ணாதிருப்பவனே நல்ல ஆத்ம சாதகன்.


அநித்தியத்தை நித்தியமென்று ஆதரவாயெண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே தனைமறக்கேன் என்குதே.
-பட்டினத்தார்

No comments:

Post a Comment