Wednesday, November 14, 2012

பூனையின் பல்



தினசரி தியானம்



பூனையின் பல்

நன்றுடையானே, தீ தில்லாளே, உன்னை வந்தடைந்த பிறகே நான் தீதில்லாதவன் ஆகிறேன்.


பூனையின் பல் கருணைக்கு இருப்பிடமா, கொடூரத்துக்கு இருப்பிடமா? பூனைக்குட்டி அது கருணைக்கு இருப்பிடம் என்று சொல்லும். ஆனால் எலியோ அது கொடூரத்துக்கு இருப்பிடம் என இயம்பும். உலகம் நல்லதா, கெட்டதா என்னும் கேள்வி எழுகிறது. கடவுள் மயமாய் அதைக் காண்பவனுக்கு அது நல்லது; மற்றவனுக்கு அது கெட்டது.


எண்ணமுந்தான் நின்னைவிட இல்லையென்றால் யான் முனமே
பண்ணவினையேது பகராய் பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment