தினசரி தியானம்
பசித்திரு
அருட்பசியெடுத்து அழுவேனாகில் அகிலாண்ட நாயகி அப்பசியைப் போக்கியருள்வாள்.
பசியெடுத்திருப்பவனுக்கு உறக்கம் இல்லை. உணவை அவன் நாடுகிறான். கடவுளை அடையவேண்டும் என்ற பசி யாருக்கு வருகிறதோ அவன் பாக்கியவான். யாரும் புகட்டாது அருள் நாட்டம் தானாகவே அவனுக்கு வந்துவிடுகிறது.
விசுத்தி மகேசுரனை விழிதிறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே.
-பட்டினத்தார்
No comments:
Post a Comment