தினசரி தியானம்
தனித்திரு
தெய்வ சிந்தனையில் ஊறியிருத்தற் பொருட்டு தனித்திருந்து பழகுவேனாக.
மனிதன் உலகுக்குள் வந்தது தனியாக. அவன் உலகைவிட்டு ஏகுவது தனியாக. உலகில் இருக்கும்பொழுதும் இடையிடையே அவன் தனித்திருந்து பழகவேண்டும். பாரமார்த்திக வாழ்வுக்குப் பக்குவம் ஆகாதவன் தனித்திருக்க முடியாது. பக்குவப்பட்டவனுக்கு அது தெய்வ சான்னித்தியத்துக்கு ஒப்பானது.
தனிமுதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல்
அணியாய மாய்ப்பிறந்திங்கு அலைந்துநின்றேன் பூரணமே.
-பட்டினத்தார்
No comments:
Post a Comment