Saturday, October 6, 2012

நதிகளை பெண்ணாகப் போற்றுவது மரபு.

நதிகளில் இவை ஆண்

நதிகளை பெண்ணாகப் போற்றுவது மரபு.

இதற்காகவே, கங்கா, யமுனா, கோதாவரி, சரஸ்வதி,
காவிரி, அமராவதி என்றெல்லாம் நதிகளுக்குப்
பெயரிட்டிருக்கிறோம். இவையெல்லாம் கிழக்கு நோக்கி
ஓடும் ஆறுகள். இந்த ஆறுகள் மட்டுமே பெண் தன்மை
கொண்டவை.





நம் நாட்டில் பெரும்பாலான நதிகள் மேற்கு தொடர்ச்சி
மலையில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி ஒடி வங்காள
விரிகுடாவில் கலக்கின்றன. அதே நேரம் ,நர்மதை ,
தபதி நதிகள் மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கின்றன.
இவை ஆண்தன்மை கொண்டவை என்பர் எனவே
இவற்றை 'நதி' என்று சொல்லாமல் ஆண்பால் சொல்லான
'நதம்' என்று குறிப்பிடுவது மரபாக வுள்ளது.

No comments:

Post a Comment