Saturday, October 13, 2012

அம்மா கூபிடராள் எல்லாரும் சாப்பிட வாங்கோ

அம்மா கூபிடராள் எல்லாரும் சாப்பிட வாங்கோ


எல்லாரும் சாப்பிட வாங்கோ மணி 8.00 ஆச்சு


எனக்கு பசிக்கலம்மா , இது அக்கா , 

அம்மா
எனக்கு சாதம் வேண்டாம் இது அண்ணா


சீக்கிரம் சாப்பிட வாங்க .... நான் கைல பிசைஞ்சு போடறேன் !!!


அம்மாவின் இரண்டாவது அழைப்பு


அடுத்த அழைப்பு திட்டா மாறுவதற்குள் நான் எழுந்தேன்
தட்டை எடுத்துக்கொண்டு


வேண்டாம்ட , நானே கைல பிசைஞ்சு போட்டுடறேன்


அம்மா கைல பிசைஞ்சு போடறேன்னு சொன்னா ரெண்டு
காரணம் இருக்கும் , ஒன்னு கார்த்தால சமைச்சது நிறைய
அப்டியே இருக்கும் யாரும் சரியா சாப்பிட்டு இருக்க மாட்டா


இல்லைன்னா


ஏதாவது ஒன்னு வீட்ல குறைவா இருக்கும்


பெரும்பாலும் சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்து குழம்பு
சாதம் சாப்பிட்டு விடுவதால்
இரவு நேரங்களில் மோர் சாதம் தான்
சாப்பிடுவோம் ,


அப்பா இன்னைக்கு வீட்ல மோர் ஷார்டேஜ் , அதுதான் அம்மா
கைல போடறா போல


சரி இந்த மோர் பற்றாக்குறையை அம்மா எப்டி சரி செய்யறா ?


சாதம் வடிக்க அரிசி களையும் போது , முதல்ல கலைஞ்ச
தண்ணிய கொட்டிடுவா, ரெண்டாவது தடவை களையும் போது
அந்த தண்ணிய ஒரு பாத்திரத்தில் விட்டு வைப்பா


அப்புறம் அந்த தண்ணில , ஆத்துல இருக்கற கொஞ்சம் மோரை
விட்டு அதனுடன் கொஞ்சம் எலுமிச்சை பழம் பிழிஞ்சு
உப்பு போட்டு , கருவேப்பிலை கிள்ளி போட்டு வச்சிடுவா


சாதத்தில் அந்த மோரை விட்டு பிசைஞ்சு கைல உருண்டையா
போட்டு அத நடுவுல குழிச்சு சாம்பார் / வெத்தக்குழம்பு
விட்டு அஞ்சு விரலும் உள்ள போற அளவு உறிஞ்சு சாப்பிடும்
சுகமே தனி.


அதுவே அம்மாவின் கைமணம் , அம்மா நீ எங்கே என் நினைவுகள் அங்கே

No comments:

Post a Comment