தினசரி தியானம்
பரபோதம்
உலகை எண்ணி உலகமயமாய் இருக்கும் தான், உன்னை எண்ணி உனது போதத்தில் நிலைத்து நின்று விடுவேனாக.
மாறுபடும் இரண்டு எண்ணங்கள் மனத்தில் ஏக காலத்தில் வருவதில்லை. ஓர் எண்ணத்தில் அது ஊறியிருக்கும்போது ஏனைய எண்ணங்கள் அடிபட்டுப் போய் விடுகின்றன. பரபோதம் என்னும் பேரறிவில் எண்ணங்கள் யாவும் அடிபட்டுப் போய் விட்டால் பேரறிவே எஞ்சி நிற்கும்.
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
தன்னில் மறைந்தது தன்கர ணங்களே.
-திருமந்திரம்
No comments:
Post a Comment