தினசரி தியானம்
கிரியை
மனம், மொழி, மெய் ஆகிய திரிகரணங்களால் தேவே, உனக்கென்றே நான் செயல் புரிவேனாக.
வயது வரும்பொழுது ஒவ்வொரு மனிதனும் வினையாற்றத் தகுதியுடையவன் ஆகிறான். அவன் புரியும் கருமம் அவனுக்கு மட்டுமல்லாது உலகுக்கும் நன்கு பயன்படவேண்டும். அத்தகைய கருமத்தைக் கடவுளுக்கென்றே செய்வது கிரியை ஆகிறது.
இதுபணிந் தெண்டிசை மண்டலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவளொரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி ஈசன்
பதிபணி செய்வது பத்திமை காணே.
-திருமந்திரம்
No comments:
Post a Comment