Saturday, October 27, 2012

சம்யோகம்



தினசரி தியானம்



சம்யோகம்



யான், எனது என்பனவற்றையெல்லாம் நீ, உனது என்று உன்மயமாக்கக் கற்றுக் கொள்வேனாக.


கடலினுக்குப் புறம்பாக அலைக்கு வியக்தியில்லை. கடவுளுக்குப் புறம்பாக மனிதனுக்கு வியக்தியில்லை. கடலைச் சார்ந்திருந்தே அலை தன் வலிவைப் பெறுகிறது. கடவுளைச் சார்ந்திருந்தே மனிதன் தனது ஆற்றலைப் பெறுகிறான். தனக்குரிய யாவையும் கடவுளிடத்திருந்து பெறுவது சம்யோகம்.


யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே உற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே.
-திருமந்திரம்

No comments:

Post a Comment