Sunday, October 7, 2012

பூதத்தாழ்வார் திருஅவதார மஹோற்சவம்

பூதத்தாழ்வார் திருஅவதார மஹோற்சவம்





108 வைணவத் தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் அருள்மிகு பூதத்தாழ்வார் திருஅவதார மஹோற்சவம் அக்டோபர் 15-ம் தேதி தொடங்குகிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் பிரதி தினம் மாலை 3 மணிக்கு திருமஞ்சனமும் அருளிச்செயலும் நடைபெறும். மாலை 5 மணிக்கு திருவீதி புறப்பாடும் நடைபெறும்.

23-ம் தேதி ஸ்ரீபூதத்தாழ்வாருக்கு காலை திருத்தேர் உற்சவம் நடைபெறும். 24-ம் தேதி காலை 6.30க்கு மூலவருக்கு திருமஞ்சனம், பூதத்தாழ்வார் மங்களாசாசனம், பின் திருக்கைத்தலத்தில் தலசயனப்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சேவை நடைபெறும். 11.30க்கு ஞானப்பிரான் சந்நிதியில் மங்களாசாசனமும் திருவீதி புறப்பாடும் நடைபெறும். மாலை 4 மணிக்கு அலங்கார திருமஞ்சனமும், இரவு 9 மணிக்கு ஸ்ரீபெருமாள், ஸ்ரீபூதத்தாழ்வார் திருவீதி எழுந்தருளலும் திருவாய்மொழி சேவை சாற்றுமுறையும் நடைபெறும்.

20-ம் தேதி ஸ்ரீமணவாளமாமுனிகள் சாற்றுமறை; 23-ம் தேதி ஸ்ரீபொய்கையாழ்வார் மற்றும் 25-ம் தேதி ஸ்ரீபேயாழ்வார் சாற்றுமறையுடன் ஸ்ரீபூதத்தாழ்வார் விடாயாற்றி உற்சவமும் நடைபெறும்.

No comments:

Post a Comment