Monday, October 1, 2012

வசிஷ்ட பாரதி வம்சா வளி

வசிஷ்ட பாரதி வம்சா வளி                  By: Grand Son S.S.Vasan

அவர் வணங்கும் இஷ்ட தெய்வமாகிய விநாயகரை வணங்கி 
தொடருகின்றேன்   1-2-1936 நேசன் தொடர்ச்சி. 



பரசுராம பாரதிக்கு இருபத்தைந்து வயதில் கல்யாணத்திற்கு தீர்மானம் செய்தார்கள் , இவரும் உடையார்பாளையம் ஜமீன்தாரிடம் போகும் வழக்கம் உண்டு.அந்த ஜாமீனில் பிரஸித்த சங்கீத ஸாஹித்ய வித்வான் கனம் கிருஷ்ணய்யர் அவர்கள் தனது தமக்கையின் பெண்ணாகிய சங்கரியை பரசுராம பாரதிக்கு கன்னிகாதானம் செய்தார்கள் ,. மறுவருடம் பரசுராம பாரதியின் தம்பி நாகசாமி அய்யருக்கு மங்கலம் தக்ஷிணாமூர்த்தி அய்யர் தனக்கு பிள்ளைகள் இல்லாமையால் தனது ஒரே கன்னிகையை வைத்யநாத பாரதியின் இரண்டாவது குமாரனாகிய நாகசாமி அய்யருக்கு கன்னிகாதானம் செய்து தனது  ஏராளமான புஞ்சை நிலங்களையும் பெண் காணியாக விட்டு தனது கிராம மிராசு பட்டாமணித்தயும் அவருக்கு கொடுத்துவிட்டார். திருச்சினாப்பள்ளி ஜில்லா முசிரி  தாலுக்கா முசிரிக்கு வடக்கு ஆறு
மைலில் உள்ளது மங்கலம் கிராமம். அந்தப் பரம்பரையில் மூன்றாம் தலைமுறைப பேரன் மங்களம் முத்துஸாமி அய்யர் பிரஸிசித்தராயிருந்து இன்றைக்கு பத்து வருடத்திற்கு முன் வரையிலும் இருந்து தேகம் நீத்தார்.


பரசுராம பாரதிகள் தனது தருமபத்தினி சங்கரி அம்மாளோடு குடும்ப                    ரக்ஷினைகளும் செய்து வருவதோடு வயது முதிர்ந்த  தனது பிதா
வைத்யநாத பாரதியின் போஷணையை மிக்க அன்பாக தன மனைவியோடு செய்து வருவார். தங்கள் குடும்பத்தில் வருடத்திற்க்கு ஒருமுறை சுமங்கலிப் பிரார்த்தனையாக உடன் கட்டை எறிய உத்தமியாகிய ஞானம்மாளையும் சுமங்கலியாக இறந்த ஜானகி அம்மாளையும் குறித்து ஒரு ஆராதனம் செய்து வருவார். அப்பொழுது இக்கவியால் துதிப்பது வழக்கம்.

'புண்ணிய ஞானம்மாள் பொருவில் ஜானகி ,
மண்ணிற் கற்புடன் மருவு தெய்வமே,
எண்ணியே மனதில் ஏத்தும் என் குலம்
கண்ணினுள் மணியெனக் காக்க கடவதே."

எனப் போற்றுவாராம். தந்தையாகிய வைத்யநாத பாரதி வானுலகடைந்தார் . பரசுராம பாரதிகளுக்கு தந்தை பிரிந்த வருத்தம் அதிகம். இருந்தாலும் குடும்ப
காரியத்திலும், சில நேரம் போனது போக ராமத்தியானத்தாலே துக்கத்தை ஆற்றிக்கொள்வார். மற்றொரு சமயம் ஆற்றில் வழக்கம் போல் வைகாசி மாதம் வருகிற வெள்ளம் தாமதிக்கக் கண்டு சாகுபடிக்கு தாழ்வாக தண்ணீர் இல்லாமல் இருக்கிறதை நினைத்து யோசித்து வருந்தி பாரதியாரை வேண்டிக்கொண்டார்கள் . அப்போது பாரதியார் ஆண்டவன் இருக்கிறார் என்று

" உள்ள முனக்கே தெரியும் உணர்ந்துவதேன் அய்யனே,
பள்ளம் படுகுழியும் உலர்ந்ததுகான் பாரதனில் ,
தெள்ளும் தியக்கமது தீர உந்தன் கடைக்கணருள் ,
வெள்ளம் பெருகிவரச் செய்மதகார் விநாயகனே"

 என்று கவிபாடின அன்று இரவே வெள்ளம் வந்ததாம்.
மறுநாள் எல்லோரும் பாரதியாரைப் புகழ்ந்தனர், மறுநாள் கிராமத்தார் எல்லோரும் தெய்வ கிருபையால் வெள்ளம் வரக்கண்டு மகிழ்ந்து எல்லாரும் பாரதியாரைப் புகழ்ந்து அந்நாளில் காளமேகப் புலவர் இருந்ததாகச்
சொல்வார்கள் அல்லவா? நாம் பார்த்ததில்லை. இப்பொழுது நமக்கு காளமேகப் புலவரைக் கண்டு கொண்டோம் அவர் தான் பாரதியார். இப்படி நமக்கு தக்க சமயங்களில் பேருதவி செய்யும் பாரதியாருக்கு நாம் என்ன பிரதி உபகாரம் செய்யப் போகிறோம்


குறள்

செய்யாமற் செய்த உதவிக்கு வய்யகமும் ,
வானகமும் ஆற்றல் அரிது ..(திருவள்ளுவர்)


சோழகர்: நாம் முன்னமே நஞ்சை நிலத்தில் ஊரில் மானியம் விட்டு இருக்கிறோம். இப்பொழுது  படுகையில், புஞ்சையில் சோளம், கம்பு, கேழ்வரகு, உளுந்து, பயறு, எள்ளு எது விளைந்தாலும் எத்துக்குக் குருணி(ஒரு மரக்கால்) நாம் கொடுக்கவேண்டும் என்று ஒப்பந்தம். செய்துகொண்டனர். அதுவுமின்றி கலியாணங்களில் பெண்ணுக்கு திருப்பூட்டின பிறகு பிள்ளையையும் பெண்ணையும் பெரியோர்களும் பந்துக்களும் பச்சை அரிசியும் , அருகம் புல்லும் கொண்டு (சேடை) ஆசிர்வதித்து இரண்டு கைகளாலும் வாரி விடுவது வழக்கம். நமது பாரதி  சேடை இடும்போது காணிக்கையாக ரூபாய் ஒன்றுக்கு குறையாமல் வீடுகள் தோறும் கொடுக்கவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்கள்.

வேத வித்துக்களான அக்ரகார வாசிகளாகிய பிராமணர்களும் தங்கள் வீடுகளில் நடக்கும் கல்யாணங்களில்  பாரதியாரை உபசரித்து பிள்ளையையும் பெண்ணையும் ஆசிர்வதிக்கச் செய்து சம்பாவனை செய்வார்கள்.

 அந்தணர்கள் கல்யாணத்தின் ஆசிர்வாதத்தில்

1) ஹரிஹர சம்பாவனை அதாவது சிவாலயங்கள் விஷ்ணு ஆலயங்களுக்கு கொடுப்பது அதற்க்கு திட்டம் 4ஆனா

2) ஆச்சார்ய சம்பாவனை இது அவர் அவர்கள்  மதாச்ச்சர்யர்களை குறித்து செய்வது.

3) சரஸ்வதி சம்பாவனை , இது பரசுராம பாரதியாருக்கு ஒரு திட்டம் செய்து 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையிற் பிரியமாக செய்து வந்தார்கள்.


இந்த சம்பாவனை தான் பாரதியாருக்கு வருஷ வருமானம், இதுவே பாரதியின் குடும்ப ரக்ஷன நிதி. கிழக்கில் உள்ள மகக்ஷேத்ரமாகிய திருவையாற்றில் இருந்து மேற்கே கல்லணை வரையிலும் இடையில் காவிரியின் இருகரையிலும் உள்ள கிராமங்கள்

1) கண்டியூர் 2) திருப்பந்துருத்தி 3 திருவாலம் பொழில், 4) நடுக்காவேரி 5) வைதினாம் பேட்டை, 6 வரகூர், 7) செந்தலை 8) கண்டமங்கலம் 9) திருக்காட்டுப்பள்ளி 10) பூதலூர் 11) ஓம்பத்துவேலி,  12) முல்லக்குடி
13) பழமாநேரி  14) நேமம் 15) இளங்காடு 16) கூத்தூர் 17) விஷ்ணும்பேட்டை       18) மகாராஜபுரம் 19) சாத்தனூர் 20) மரூர் 21) தில்லைத்தானம், 22) திருமழுபாடி

 முதலிய கிராமங்கள் மற்றும் பலவாம் . பரசுராம பாரதிக்கு இவ்வூர்களில் எல்லாம் சரஸ்வதி சம்பாவனை கொடுத்து வந்தார்கள் . அது பரம்பரையாக இற்றைக்கு ஐம்பது வருஷத்துக்கு முன் என் பிதாவாகிய வைத்தியநாத பாரதி அதனை தனது ஐம்பத்து ஆறாம் ஆண்டு அனம்  அச்சரஸ்வதி சம்பாவனையைக்  கொண்டே தனது குடும்பத்தை ரக்ஷித்து  வந்தனர்.

வருஷத்த்திற்கு 150௦ ரூபாய்க்கு மேல் 200ரூபாய்க்குள் குறையாமல் வர நானும் பார்த்திருக்கிறேன். எங்கள் தந்தையின் பிறகு நாங்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு குடியேறி விட்ட படியாலும் திருநெல்வேலி மதுரை முதலிய அயலூர்கள் சஞ்சரிக்க யத்தனித்தமையாலும் இச்ச்சம்பாவனையை பெறுவதற்கு அவகாசம் இல்லாமற் போயிற்று; என்றாலும் உள்ளூரில் அபிமானித்துத்  திருவயாற்றிலிருந்து என்பெரிய தந்தை நாகுபாரதியின் குமாரன் தமிழ் அறிவும் சங்கீத ஞானமும் உடையவனும் , கீர்வாணப் பிரஸ் மானேஜருமாயிருந்த பரசுராமருக்கு சாத்தனூரிலேயே கல்லியாணமும் செய்திருந்த படியால், அவர்களில் சிலர் சரஸ்வதி சம்பவனையை என் தம்பியாகிய பரசுராமனுக்கு அபிமானித்து கொடுத்துவந்தார்கள். அவனும் சந்ததியின்றி நாற்பதாவது வயதில் நானிலம் துறந்தான்.

மூல புருடராகிய அப்பறசுராம பாரதியாருக்கு 30-வது வயதில் கொள்ளிடக்கரையில் உள்ள திருக்குன்னம் என்ற கிராமத்தில் பிரசித்த சங்கீத வித்வான் கனம் கிருஷ்னையருடைய தமக்கையின் பெண்ணாகிய சங்கரி என்ற கன்னிகையை கன்னிகாதானம் செய்து கொடுத்தார்கள் . அவர்கள்
இல்லறம் நடத்தி சில ஆண்டுகள் செல்ல சில குழந்தைகளை ஆணும் பெண்ணுமாக 5, 6,  குழந்தைகளை பெற்றார்கள் . அவர்களில் மூத்த குமாரர் ராமஸ்வாமி பாரதி , பரசுராம பாரதி பெரிய குடும்பி ஆயிட்டார். இவருக்கு அருணாசல கவியால் எழுதிய இராமாயண பதம் முற்றும் பாடம். ஆகையால் பகலில், ஒழிந்த மாலைக்காலத்தில் ராமாயண கீர்த்தனைகளை பாடிக்கொண்டு கம்பராமாயணக் கவிகளையும் இடை இடையே சொல்லி பொருள் கூறி கதை சொல்லி ஜனங்களை ரசிக்கச்  செய்வதே இவருடைய நித்திய வழக்கம்.


இப்படி இருக்கும் பொழுது ஒருசமயம் கோடை மிகுதியால் தன் கூரை வீடு தீப்பற்றிக்கொன்டது. அப்பொழுது பாரதியார் குட்டிகளோடும் மாடு கன்றுகளோடும் வெளியில் வந்து விட்டார். வெளியில் வந்தவர் தன் இடுப்பு வஸ்திரம் ஒழிய மேல் வஸ்திரத்தை "அக்னி பகவானே ஸ்வாஹா" என்று எரிகிற நெருப்பில் எறிந்துவிட்டு தெருவில் வந்து நமஸ்காரம் செய்து  குழந்தை குட்டிகளை அழைத்து பெருமாள் கோவிலில் போய் உட்கார்ந்துவிட்டார். உட்கார்ந்து ஸ்ரீ ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டு கதறினார். வேடிக்கைப் பார்க்க வந்தவர்களெல்லாம் கண்ணும் கண்ணீருமானார்கள் அநேகர் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து ஊற்றினார்கள்.  இதற்குள் சோழர் சில ஆட்களையும்  கூட்டிக் கொண்டு ஓடிவந்தார்.  பக்கங்களில் பற்றாமல் அக்னி தணிக்கப்பட்டது.

அவ்வூரில் தலைமை பெற்றவரும் வயது சென்றவரும் பாரதியாரிடம் பக்தியுடய்வருமான காலாட்டி சோழகர் உடனே கோவில் வாசலில் வந்து பலரும் சூழ்ந்திருக்க மனைவி மக்களோடு கண்ணும் கண்ணீருமாக ஆனந்த பரவசமடைந்து தன்னை மறந்து பாரதியார் ஏக வஸ்திரத்தில் ஏக்கத்தோடு பாரதியார் இருக்கக் கண்டார் அனவீடு  மெழுகுபோல அன்பால் உருகி கண்ணீர் பெருக பாரதியாரைப் பார்த்து வணங்கி

"சாமி வருத்தப்பட வேண்டாம் பழைய வீடு வேகுது புதிய வீடு ஆகுது.

புதிய வீடு கட்டி புதுச் சோறு சமைத்து சாமிக்கு படைச்ச பிறகு இன்னிக்கு ஆண்டவன் சேடம் தான் அடியேன் புசிப்பது. கூபிடுங்கடா கம்காணியை, காவற்காரனை கூப்பிடு, வெட்டியானை கூப்பிடு . ஆளுக்கு மூங்கில்               வெட்டியாங்க, யார் படுகையில் மூங்கில் கொத்தாய் இருந்தாலும் சரி சிறிது, பெரிது இனவாரியாய்  கொண்டுவரச் சொல்.


யாருடா இந்தக கிள்ளை பள்ளர்களை கூப்பிட்டு . சுத்தமாக வரண்டி குப்பைக் குழிகளில் கொட்டிவிடுங்கள் . புதிதாக மண் கொணர்ந்து போட்டு பழைய சுவர்களைத்  தட்டி புது சுவர்களை எழுப்புங்கள் என்றார். உடனே மேலே படுகையிலிருந்து கொத்து மூங்கில்களை கைகோர்த்து மோடு கட்டி வரிச்சுகட்டி பேக்கரும்பு தட்டிகளால் வரிச்சு  விரிச்சு அப்பொழுது புது கீத்துக்கள் முடைந்து கூரை வேய்ந்து சுவர்கள் மழுப்பி தரைகளை இடித்து சமப்படுத்தி வாயிற்படி, திண்ணை அறைகள் கூடங்கள் அமைத்து புழக்கடையும் மாட்டுச்  சாப்பும் போடப்பட்டது. இவைகள் ஒரு ஜாம நேரத்திற்குள் எல்லாம் புதிதாகவே அமைந்துவிட்டன.

சோழகர் அம்மணியும் குழந்தைகளும் பட்டினி இருக்காங்கள் சீக்கிரம் ஆகட்டும் என்று ஆட்களை வேலை விரட்டுகிறார். அவர்கள் அதிகாரத்திற்கும் அன்பிற்கும் இணங்கியவர்களாக முடித்தார்கள்.


முதல் ஜாமத்தில் எறிந்த வீடு மூன்றாம் ஜாமத்தில் சோழகர் புதிதாக சொன்னபடி ஆக்கிவிட்டார்கள். ஜனங்கள் அதிசயம் அடைந்தார்கள் . வாயிலில் வாழைமரம் , மாவிலைத் தோரணம் கலியாண  வாசல் போல் அமைக்கப்பட்டது. அக்ரகாரத்தில் உள்ளவர்களும், கணக்குப்பிள்ளை முதலானவர்கள்  கிரஹப் பிரவேசம் செய்வதற்கு ஆயத்தம் செய்தார்கள். கல்வியில் கம்பர் போல் இருக்கிற பாரதிக்கு சடையப்ப வள்ளலைப்போல் வீடுகட்டி வைத்தீர்கள் சோழகரே, நீங்கள் சோழ மகாராஜாவைப்போலவும்
ஆதரிக்கிறீர்கள் என்றார்கள்.

உடனே சோழகர் பாரதியாருக்கு சோமன் ஜோடி(வேட்டி)  , அம்மாளுக்கு புடவை குழந்தைகளுக்கு எல்லாம் புதிய வஸ்திரங்கள் , தேங்காய்கள் , வாழைப்பழ தாறுகள் வெற்றிலைப் பாக்கு கோயிலிலிருந்து சந்தனம், புஷ்ப மாலைகள் தயாரிக்கப்பட்டன , வீட்டிற்கு சாப்பாட்டிற்கு பச்சரிசி , பருப்பு, உப்பு, புளி, மிளகாய் சாம்பரங்கள்  , பால், தயிர், நெய் வகையறாக்கள், காய்கறி , இலை முதலிய சர்வ பதார்த்தங்களும் ஆயத்தம் ஆயின.

பாரதிகள் குடும்பத்தாரோடும், பிராமனரோடும், சோழரோடு  காவிரியில்
சென்று ஸ்நான அனுஷ்டானங்களை முடித்துக்கொள்ள புதிய வஸ்திரங்களை தரிப்பித்து, கோயில் சென்று கடவுளைத் தொழுது, மதகடி
விநாயகருக்கு தீபாராதனை  செய்து நமஸ்கரித்துக் கொண்டு பெருமாள்
கோவிலில் பிரதக்ஷின நமஸ்காரம் செய்துகொண்டு மத்தியானம் இரண்டு
மணிக்கு(20 நாழிகைக்கு மேல்) மேல் சுபமுகூர்த்தத்தில் கிரஹபிரவேசம்
செய்து வாஸ்து சாந்தி, ஹோமம் முதலியன செய்தார்கள். தான் எடுத்துக்கொண்டு வந்த ராமாயணத்தை வைத்து பூஜை செய்தார். வந்தவர்களுக்கு  சந்தன தாம்பூல மரியாதை, கிராம மஹா ஜனங்களுக்கு
செய்து  சோழகருக்கு உபசாரம் சொன்னார்கள். அப்போது பாரதியார் சோழகத்
தம்பியாரைக் குறித்து மகா ஜனங்களை நோக்கி சொன்னதாவது:-

ஸ்ரீ ராமபிரானுக்கு சித்திரகூட மலையில் இளைய பெருமாளாகிய
இலக்ஷ்மணப் பெருமாள் பர்ணசாலை கட்டிக் கொடுத்ததாகப் படித்திருக்கிறோம் , பார்த்ததில்லை. இங்கு என் விஷயத்தில் இச் சோழகத்
தம்பியார் அவ்வாறே எனக்குச் செய்து பிரத்யக்ஷமாக காணும்படி எரிந்த
வீட்டை நூதனமாக புரிந்துவிட்டார்.

No comments:

Post a Comment