Tuesday, October 30, 2012

ஓமப்பொடி செய்வது எப்படி


ஓமப்பொடி செய்வது எப்படி - தித்திக்கும் தீபாவளி ஐடம்-2



கடலை மாவு 2 கப்
அரிசிமாவு 2 டீஸ்பூன்
ஓமம் 1 டீஸ்பூன்
ஜீரகம் 1 டீஸ்பூன்
பெருங்காயம் கொஞ்சம்
உப்பு தேவைக்கேற்ப
வெண்ணை 50 கிராம் (தேவைக்கேற்ப சேர்க்கவும்)





ஓமம் , ஜீரகம் இரண்டையும் கொஞ்சம் தண்ணீரில்
ஊறவைத்து அந்த தண்ணீரை வடித்து தனியாக
எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்





இப்பொழுது கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயம் ,
வெண்ணை, உப்பு ஆகியவை போட்டு கைகளால் கலந்து
வடித்து வைத்த (ஓமம், ஜீரகம்)தண்ணீரை விட்டு
கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து
வைத்துக்கொள்ளவும் .



அடுப்பில் மிதமான சூட்டில் வானலியில் எண்ணை விட்டு,
எண்ணை சூடு அடைந்ததும் , பிசைந்து வைத்த மாவை அச்சுக்குழலில் போட்டு பொறுமையாக அழகாக பெரிய வட்டமாக பிழிந்து சிவக்காமல் பொரித்து எடுக்கவும் .



பொதுவாக ஓமப்பொடிக்கு கருவேப்பிலை வறுத்து சேர்க்க மாட்டார்கள் மேலும் இது அவரவர் விருப்பத்தை பொருத்தது.

கண்ணைக்கவரும் ஓமப்பொடி இதோ உங்கள் முன்னே
அனைவருக்கும் கொடுத்து நீங்களும் சுவைத்து மகிழுங்கள்



No comments:

Post a Comment