Wednesday, October 31, 2012

செயலும் சாந்தியும்



தினசரி தியானம்



செயலும் சாந்தியும்



இடையறாது வினையாற்றுவதும், மனம் யாண்டும் அமைதியுற்றிருப்பதும் ஒன்று சேர்ந்து நல்ல வழிபாடு ஆகிறது.


ஹிருதயம் ஓயாது அடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் அது களைப்புறுவதில்லை. உடல் அங்ஙனம் உழைத்துக்கொண்டிருக்கட்டும். மனம் சாந்தியில் நிலைத்திருந்தால் உழைக்கிற உடலுக்கு ஆயாசம் உண்டாகாது. வினையாற்றுதலும் விச்ராந்தியும் சேர்ந்தே நிகழ்கின்றன.


சித்த நினைவுஞ் செயுஞ்செயலும் நீயெனவாழ்
உத்தமர்கட் கான உறவே பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment