Thursday, September 13, 2012

பைனாப்பிள் ரசம்(Pinapple Rasam)

பைனாப்பிள்  ரசம்


பழமாய் சுவைக்கலாம் , பழரசமாக சுவைக்கலாம் , ஏன்
பருப்பு ரசமாகவும் சுவைக்கலாம் வாருங்கள் பைனாப்பிள்
போட்டு ரசம் செய்வது எப்படி என்று அறிந்துகொள்வோம்


பைனாப்பிள் நல்ல பழமாக 4 துண்டுகள் தெரிவு செய்து கொள்ளுங்கள்


பிற தேவைகள் :-

தக்காளி           1
துவரம் பருப்பு    1/2 ஆழாக்கு
புளி கரைசல்       1 கப் 
காரப்பொடி          2 ஸ்பூன் 
பச்சை மிளகாய்  2
உப்பு                     தேவைக்கேற்ப 
பெருங்காயம்      1 ஸ்பூன் 
இஞ்சி                  கொஞ்சம்
மஞ்சள் போடி     கொஞ்சம் 
கருவேப்பிலை   கொஞ்சம் 
கொத்தமல்லி      கொஞ்சம் 
கடுகு , மிளகாய் வற்றல் தாளிக்க  




பருப்பை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும் , 

ஒரு பாத்திரத்தில் பைனாப்பிள் துண்டுகள் போட்டு , கரைத்த புளி கரைசல் 
சேர்த்து , மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து , தக்காளியை பொடி 
பொடியாக நறுக்கி போடு , 1 டம்பளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து 
கொத்துக்க விட்டு, நன்றாக மத்து கொண்டு மசித்து விடவும் , பிறகு இதனுடன் 
வேகவைத்த பருப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும் .

அடுப்பில் இருந்து இறக்கி , கொஞ்சம் பைனாப்பிள் துண்டுகள் சேர்த்து 
கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமளி சேர்க்கவும் . நெயில் கடுகு 
தாளிக்கவும்.



சுவைக்க , மனமுள்ள பைனாப்பிள்  ரசம் , இதோ உங்கள் முன்னே , 
ஜூஸ்  மாதிரி குடிங்க , இல்ல சாதம் போட்டு சாப்டுங்க , அது உங்க 
விருப்பம் .


பழ ரசமா , பைனாப்பிள் ரசமா , நீங்க சொல்லுங்க !!!

No comments:

Post a Comment