அவருடைய இஷ்ட தெய்வமாகிய விநாயகரை தொழுது தொடருகின்றேன்
ஓவு நாயகன் ஓடுடன் கட்டையில் ,
மேவி தீயினில் மூழ்கி மேலுல,
காவி தாவவே ஆவி தாவினாள்" (1)
கண்ணனென் காதலனை காரிகையால் தாம் கலந்து
நண்ணுமொரு கட்டை யெறி நயந்தனள் ன் தான் என்னேடி
நண்ணுமொரு கட்டைஎரின்யந்தவள் தான் யாரென்னின்
கண்ணும் என்குல தெய்வம் ஞானம்மாள் காணேடி (2)
முன்னாளில் பெண்கள் முயங்குல தருமம் என்பார்
இன்னாளினும் கண்டோம் எறிபுக்க தென்னேடி
இன்னாளினும் காண எறிபுக்கர் யாரென்னிற்
என்னாளும் எமைகாக்கும் ஞானம்மாள் காணேடி!...............(3)
மடமாரு நாணச்சம் மருவுமொரு மடந்தை
உடநாத னோடெறியில் உற்றது தாநென்னேடி
உடநாத னோ டெறியில் உற்றவர்தாம் யாரென்னில்
கடமையென் குலங்கக்கும் ஞானம்மாள் காணேடி .............(4)
என்று 4 பாக்களும் அக் காலத்தில் வைத்தியநாத பாரதியார்
கூறியது என் கன்ன பரம்பரை மேல் இருவர்களுக்குமே
ஸமஸ்காரங்கலைச் செய்து உடனே அவர்களைக்
குலதெய்வமாகப் போற்றி வந்தார்கள். இவ்வழக்கம் ஆரிய நாட்டு நாரிமணிகள் சீரிய ஒழுக்கமெனத் தேறி அனுபவித்து வந்தார்கள்.
இது பூர்வ கால வழக்கம் இன்றைக்கு 100 வருஷங்களுக்கு
முன் வரையிலும் இருந்தது. அதற்குமுன் நூற்றாண்டில்
கருணைக்கடலாகிய அக்பர் சக்ரவர்த்தி இதை நிறுத்த முயற்ச்சித்தார்
அஃது பின் நூற்றாண்டில் ஆங்கில தர்ம ஆட்சியில் " வில்லியம்பெண்டிங்" என்பவரால் சட்டமாக நிறுத்தப்பட்டது..
சில வருடத்திற்குப் பின் வைத்தியநாத பாரதியின் மனைவியாகிய
ஜானகி அம்மாள் ஞானம்பாளைப் பிரிந்து இருக்க ஆற்றாதவலாய்
தானும் 3 வது வருடத்தில் சுமங்கலியாக திடீரென்று உயிர் நீங்கி
உத்தம கதியை அடைந்தார். தாயார் இறக்கும் பொழுது பரசுராம பாரதிக்கு
20 வயது இவரது தம்பி நாகசாமி அய்யருக்கு வயது 15, . இப் பரசுராம பாரதி தந்தையைப்போல் தமிழறிவும் தெய்வபக்தியும் உடையவர். ஸ்ரீராமனாமமே கத்தி எனக் கொண்டவர்."எத்துகின்றோம் நாத்தழும்ப ராமன் திருப்பெயரே" என்று சொல்லி ஒருவரை மனமாரப் புகழ்ந்தாலும் பலிக்கும்.
இவர் அபசாரம் யாரும் செய்வாராயினும் அதையும் பொருட்படுத்தாமல் சகிக்கும் நற்குணமுடயார். நிரம்ப மனம் பொறாமல் ஒருசமயம் பிறரை நொந்து கூறுவாராயின், அது பிறர்களை வருத்துவதும் உண்டு.
நோவுடாய மணிதரேனும் மாடு கன்றுகளேனும் வருந்துவது கண்டால
தான் உள்ளம் கசிந்து ராமன் பெயரைச் சொல்லி மண்ணை அள்ளிக்கொடுப்பார் அதைக் கொண்டு அவர்கள் நன்மை அடைவார் என்பது அவ்வூரில் பிரசித்தம். அதனால் அவ்வூரார் இவரைத் தெய்வம் போல
பணிந்து கொண்டாடுவார்கள். இவர் காலையில் காவேரி ஸ்நானம் செய்து நியமம் முடித்து வீட்டிற்கு வந்து கம்பராமாயணச் சுவடியைப் பாராயணம் செய்வார். பூஜை முடிந்து போஜனமும் செய்த பிறகு ரா - ம த் தியானமும் செய்வார். அவ்வூரில் காவேரிக்கரையில் மரத்தடியில் ஒரு விநாயகர்
ஆலயம் உளது, அம மூர்த்தியை ஸ்தாபித்து அச் சிறு ஆலயம் கட்டியவர்
இப் பாரதியாரே என அவ்வூரார் சொல்லக் .கேட்டிருக்கிறேன்
அவ்வினாயகர் பேரில் பஞ்சரத்தினம், வேறு சில பதிகம் பண்டைக்காலத்தில்
சிறுவர்கள் பழகும் மானம்புப் பாட்டு, கோலாட்டப் பாடல்களும் இவர் பாடியதாக கேள்வி. பல பல சமயங்களில் பல பல கவிகள் பாடியதாக கேள்வி மழை பெய்யாவிடில் பாரதியாரை அவ்வூரார் கவி படும்படி கேட்டுக்கொள்வது வழக்கமாம்.
ஒருசமயம் புரட்டாசி மாதம் வரையில் மழை பெய்யாம இருந்ததாம் ஆனி மாதத்தில் அஸ்த நட்சத்திரத்தில் விரை விட்டால மெத்த விளைவாம் என்பது பண்டைப் பழமொழி. இவ்விஷயம் ஸ்ரீ மத் கவி சக்ரவர்த்தியாகிய
கம்பநாட்டாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய 'ஏரெழுபது' எனும் நூலில் விரைவிடு இலக்கணம் என்னுஞ் செய்யுளின் உரையில்
விளக்கியிருக்கிறார்.
வைகாசி மாதம் காவேரியில் வெள்ளம் வராமலும் , ஆனி ஆடி ஆவணி புரட்டாசி வரையிலும் நாலு மாதங்களாக மேல் மழை பெய்யாமலும் இருத்த பொழுது கிராம வாசிகளாகிய பலரும் சோழர்களும் சேர்ந்து பாரதியார் வீட்டின் வாசலை அடைந்து சாமி பாரதியாரே மழை பெய்தால் ஒழிய எழுந்திருந்து போகமாட்டோம் என்று தெருவின் வாசலில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். அப்போது ஸ்ரீராமனாமமே செய்துகொண்டிருந்த பரசுராம பாரதியார் பின் வருமாறு ஒரு கவி கூறினார்.
வெண்பா
"சீராமன் பாதத்தை சிந்திக்கப் பெய்யும் மழை
வாரா வளங்களெலாம் வந்திடுமே -- தேறீர்
நன்மைகள் யாவும் நாளுக்கு நாள் பெருகும்
தின்மைகள் ஏதேதும் வாராதே
இதைச் சொல்லி ' ஸ்ரீ ராமன் கிருபையாகிய கருணை மழை பொழியும்
என் அப்பன் மதகடி விநாயகன் எங்கு போனான். நீங்கள் மனம்
தேறியிருங்கள் சத்தியமாய் நம்புங்கள்' என்று சொல்லி விபூதியை
தரித்துக்கொண்டு விநாயக மூர்த்தியை குறித்து ,
" மண்ணுருகப் பேயும் பொன்னுருகக் காயும்
மண்ணாளும் புரட்டாசி என்பது பிரட்டா--சீபோ
எண்ணுரு தேதியுமாச்சே இனிமேல் எப்படி விறைப்பு
எப்படி நாத்துவிடல் எப்படியே நடவாகும்
அண்ணலே இது உனக்கு சம்மதமா உந்தன்
அடிமைகளாம் குடிகளுறை சாத்தநூரதனில்
பண்ணுறு செய்பயிர் தழைக்க உயிர்களெலாம் செழிக்க
பக்ஷமுடன் மதகடிவாழ் கணபதியே அருள்க"
என்று சொல்லி வெற்றிலை போட்டுக்கொண்டு ஜனங்களுடன்
பேசிக்கொண்டிருக்கும்போதே கார் மேகங்கள் வந்து கூடி ஒரு
நாழிகை உலகம் செழிக்க கொட்டிவிட்டதாம். அப்போது
பாரதியார்
" வளநகர் முனிவரன் வரலும் வானமின்
கலாணாமற் கதுமென கடுகி வான்மிசை
சள சள வென மழைத் தாரைகான்றன
குளனோடு நதிகளும் குறைக தீரவே" ---- கம்பர்.
கலைக்கோட்டு முனிவர் வரவால் அங்க தேசத்தில் மழை பொழிந்து வறுமை நீங்கியவாறு இங்கும் பெய்தது ஒரு குறையும் இல்லை போங்கள் என்று சொல்லிவிட்டார். அவ்வருஷம் யாவர்க்கும் விளைவு அதிகமாக இருந்தது அதனால் அவ்வூரார், பொதுவில் கோயிலடி சேய் என்று ஒரு பெரிய செய்யும் அதன் பக்கத்தில் வேறு சில நிலங்களும் ஊர் பொதுவில் பாரதிமானியம் என்று விட்ட நிலம் இன்று எங்கள் குடும்பப் பொதுவில் அனுபவப்பட்டு வருகிறது . வருஷந்தோறும் வேண்டிய உணவுப்பொருட்கள் , மற்றும் கரவைப்பசுக்கள் கொடுத்து ஆதரித்தார்கள்.
தொடரும் .................. தொடர்ந்து வாருங்கள்
ரிஷி பஞ்சமி அன்று மஹாலக்ஷ்மி தாயார் பெருமாளை திருமணம் செய்ய வேண்டி விரதம் இருந்த நாளாம் . ஸ்ரீமன் நாரயணனும் மஹாலக்ஷ்மியை சீறும் சிறப்புமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று குபேரனிடம் முதல் முதலாக பணம் வாங்கிய நாளாம்! இந்த ரிஷி பஞ்சமி தினம், எனவே இந்த ரிஷி பஞ்சமி தினத்தன்று விரதமிருந்து மஹாலக்ஷ்மி பூஜையை சிவப்புத் தாமரையும், மல்லிகைப் பூவும் கொண்டு பூஜை செய்தால் கடன்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்!!
ReplyDelete