Tuesday, September 4, 2012

கீரை மசியல்


கீரை மசியல் (முளைக்கீரை):-  By:- Savithri Vasan


கீரை ஒரு கட்டு


கீரையை நன்றாக பொடி பொடியாக
நறுக்குங்க , இரன்று மூன்று முறை
தண்ணீரில் அலசி வைத்துக்கொள்ளவும்.

கீரை நறுக்கும்போது அதிக கவனமாக
நடுவில்  இருக்கும் புல், மற்றும் காட்டுச்
செடிகளை களை எடுத்து நறுக்கவும்.

வாயகன்ற பாத்திரத்தில் கீரயைபோட்டு
கொஞ்சம் உப்பு , கொஞ்சம் சுண்ணாம்பு
கொஞ்சம் ஜீரகம் போட்டு வேகவைக்கவும்.

வேகும்போதே அடுப்பில் வைத்து மத்து
கொண்டு அதை மசிக்கவும்.

கடுகு மிளகாய்வற்றல் , உளுத்தம்பருப்பு
தாளித்து இறக்கவும்.


இது சிம்பிள் மெதட் , சிலர் இதில்

பூண்டு போடுவார்கள் , 
வெங்காயம் ,
தக்காளி சேர்ப்பார்கள் , 

எல்லாம் சரி
ஒருமுறை கீரையை மட்டும் தனியாக
மசித்து சுவைத்து சொல்லுங்களேன் 

No comments:

Post a Comment