Sunday, September 16, 2012

புட்டு , இனிப்பு புட்டு

புட்டு , இனிப்பு புட்டு

புட்டு பெரும்பாலும் வீட்டில் பெண் குழந்தைகள் பருவ வயதை
அடையும் பொழுது 3ம்  நாள் புட்டு சுத்தும் சடங்கு நடை பெரும்

ஆனால் இன்றோ நினைத்த பொழுது செய்து சுவைகின்றோம்
நவராத்திரி காலங்களில் ஒருநாள் சுண்டலாக செய்து நெய்வேத்தியம்
செய்து , வழங்கப்படுகிறது.








தேவையானவை :-

அரிசி             1 ஆழாக்கு
வெல்லம்  1/1/2 ஆழாக்கு
தேங்காய் துருவல் 1 கப்
ஏலக்காய்  5
முந்திரி      10

அரிசியை ஊறவைத்து , காற்றாட உலர்த்தி , மிக்சியில் அரைத்து
வைத்துக்கொள்ளவும் .

வாணலியில் மிதமான சூட்டில் , அரைத்த அரிசிமாவை வறுத்து
பொன்னிற கலர்  வந்ததும் இறக்கி வைக்கவும் .

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து , கொஞ்சம் உப்பு , மஞ்சள் பொடி
சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து , அதை இறக்கி வைக்கவும் .

தண்ணீர் சூடு ஆறியதும் . அதை கொஞ்சமாக  வறுத்த  மாவில்
விட்டு நன்றாக கலந்துகொள்ளவும். மாவில் அதிகம் தண்ணீர்
சேர்க்கவேண்டாம் , மாவு  கட்டி கட்டியாக ஆகாமல் பார்த்துக்
கொள்ளவும்.

இவ்வாறு பிசைந்த மாவை ஆவியில் வைத்து எடுக்கவும்

வெல்லம் கெட்டிப் பாகு வைத்துக்கொள்ளவும் .

வெல்லப்பாகை  ஆவியில் வைத்து எடுத்த மாவில் கொட்டி கலந்து கொள்ளவும். பிறகு கைகளால் நன்றாக உதிர்த்து விடவும்.

ஏலக்காய் பொடி , வறுத்த  முந்திரி சேர்த்தால்  சுவையான
இனிப்பு புட்டு ரெடி.


புட்டு செய்யறத பத்தி புட்டு , புட்டு  வச்சாச்சு , அம்புட்டு தான் 

No comments:

Post a Comment