Sunday, September 2, 2012

பருப்பு இல்லாத சாம்பார்



பருப்பு இல்லாத சாம்பார்........ ரெடி !!!!! By:- சாவித்திரி வாசன்
 ----------------------------------------------



புளி கரைத்து , உப்பு சேர்த்து ஏதேனும் சாம்பார் காய்கள் சிலவற்றை
வதக்கி இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்


வெந்தயம்,
வெள்ளை எள்ளு , 
மிளகாய் வத்தல் 
தேங்காய் 
இவை நான்கையும் வறுத்து மிக்சியில் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும் .

 அடுப்பில் கொதிக்கும் புளித்தண்ணீரில் இதை 
சேர்த்து கொஞ்சம் பெருங்காயம் (தேவைப்பட்டால்) 
சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் , 
(சாம்பார் நன்றாக கெட்டி பட வேண்டும் என்றால்
கொஞ்சம் அரிசி சேர்த்துக்கொள்ளவும் .மேலே 
சொன்னவற்றை அரைக்கும்போது ) 

கடுகு , 
உளுத்தம் பருப்பு , 
மிளகாய் வத்தல் தாளிக்கவும் , 
கருவேப்பிலை சேர்க்கவும்

பருப்பு இல்லாத சுவையான சாம்பார் தாயார். 


இத செஞ்சு பார்த்து சொல்லுங்க சுவை எப்டி 
இருந்ததுன்னு , நான் இப்பதான் சாப்பிட்டேன் , 
அஹா பிரமாதம்

No comments:

Post a Comment