Sunday, September 2, 2012

காஞ்சிவரம் இட்லி



காஞ்சிவரம் இட்லி:-  By:சாவித்திரி வாசன்



இட்லி அரிசி :1.1/2 cup

பச்சை அரிசி 1/2 cup

உளுந்து 1/2 cup



இவை மூன்றையும் ஒன்றாக ஊறவைக்கவும் சுமார் 4---5 மணிநேரம் ஊறியதும் மிக்சியில் கொரகொர என்று அரைத்துக்கொள்ளவும் மாவில் உப்பு சேர்த்து நன்றாக மூடி வைக்கவும் மறுநாள் காலையில் எடுத்து உபயோகப்படுத்தலாம்.

இட்லிக்கு உபயோகப்படுத்தும் முன் மிளகு பொடி செய்து போடவும் , சீரகம் சேர்க்கவும் (மற்றும் நெய் ஒருமுட்டை விருப்பத்தின் பேரில் சேர்க்கலாம் )

இட்லி தட்டில் கொஞ்சம் எண்ணை தடவி அதில் இட்லி செய்வது போலோ அல்லது பெரிய தட்டில் முழு அளவு மாவை ஊற்றி ஆவியில் வைத்து எடுக்கவும் . 

இருபது நிமிடம் ஆவியில் வைத்து வெளியே எடுத்து தேவையான அளவுகளில் , பரிமாணங்களில் துண்டுகளாக போட்டு சுவைக்கவும்.(Required shape and size)

இதுக்கு அட்டகாசமா சைடு  டிஷ்   ஒரு கொஸ்து செஞ்சு சாப்பிடலாம் .

No comments:

Post a Comment