Tuesday, September 11, 2012

ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை




மேட்டூர் சீதா மலையில் 16 அடி ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு! 



ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, 16 அடி உயர ஜீவ ஆஞ்சநேயர் சிலை மேட்டூர் சீதா மலையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. மேட்டூர், சீதாமலையில் ஐயப்பன் கோயில் உள்ளது. மேட்டூர் மாருதி பக்த சேவா மையம் சார்பில், ஐயப்பன் கோவில் அருகிலுள்ள குன்றில், 16 அடி உயர ஜீவ அஞ்சநேயர் சிலை பிரதிஷ்ட செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, திருப்பூர் அடுத்த திருமுருகன் பூண்டியில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, 16 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை, நேற்று லாரி மூலம் சீதா மலைக்கு கொண்டு வரப்பட்டது. மாருதி பக்த சேவா நிர்வாகிகள், சிலையை கிரேன் மூலம் குன்றுக்கு கொண்டு சென்றனர். இன்னும் சில நாட்களில், ஜீவ ஆஞ்சநேயர் சிலை சீதா மலையில், பிரதிஷ்டை செய்யப்படும், என பக்த சேவா சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.



மலை மீதமரும் மாருதி , பனிபோல் தீர்த்திடுவார் துயர் தன்னை 

No comments:

Post a Comment