பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா துவக்கம்
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் விழாவின், துவக்க நாளான நேற்று, கொடியேற்றம் நடந்தது. தங்க கவசத்தில் அருள்பாலித்த மூலவருக்கு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, கொடிமரத்திற்கு அருகில், மூஷிக வாகனத்தில் உற்சவ விநாயகரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் எழுந்தருளினர். அங்குசத்தேவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மூஷிக உருவம் பொருந்திய கொடிக்கும் மலர் தூவி பூஜை நடந்தது. அடுத்து, கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில், மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் வீதி வலம் வந்தார். இன்று முதல், எட்டாம் திருநாள் வரை காலை, 9:30 மணிக்கு, வெள்ளிக் கேடகத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.
No comments:
Post a Comment