Wednesday, September 5, 2012

அடை, அடை, அடை. அடை

அடை                    ......... By: Savithri Vasan

அடை ஒரு மாலை நேர சிற்றுண்டி அனேகமாக அனைவர்
உள்ளங்களையும் கவர்ந்தது இது.

இதில் பலவகை அடை உண்டு
வெறும் அடை
கீரை போட்ட அடை (முருங்கக் கீரை சிறந்தது)
கோஸ் அடை.
வெங்காய அடை.

தயாரிப்பு ஒரே மாதிரித்தான் , அரைத்த மாவுடன்
தேவையான காய் அல்லது கீரை கலந்து அடை
செய்யலாம்

தேவை:

அரிசி
துவரம் பருப்பு
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
பச்சை மிளகாய்    7
காய்ந்த மிளகாய்  7
உப்பு  தேவையான அளவு
பெருங்காயம்  சிறிது


தேவையான அளவு : அரிசி 1 ஆழாக்கு
பருப்பு மூன்றும் சேர்ந்து  1 ஆழாக்கு

இவையனைத்தும் ஊறவைக்கவும்  2 மணி நேரம்

மிக்சியில் முதலில் , பெருங்காயம் , உப்பு , மிளகாய்
சேர்த்து அரைக்கவும், பிறகு பருப்பு சேர்த்து கொர
கொரவென்று  அரைத்துக்கொள்ளவும்

அடுப்பில் பெரிய தோசைக்கல் / தவா மிதமான
சூட்டில் , இரண்டு கரண்டி அடைமாவு விட்டு
கைகளால் நன்றாக தட்டவும் (இதுக்கு பேர் தான்
ஆடை தட்டுவது)
நடுவில் கரண்டியால் நான்கு துளைகள் போடவும்



நன்றாக சுற்றிலும் எண்ணை  விடவும் , உங்கள்
தேவைக்கேற்ப  மென்மையாகவோ , மொற, மொறப்பாகவோ
செஞ்சு எடுங்க

தட்டுல அடை ,  நல்ல கெட்டி நெய் (அடை சூட்டில் உருகி
ஓட வேண்டும்) கொஞ்சம்  வெல்லம் , அப்புறம் சாம்பார்
இப்டி வித விதமாக சைடு  டிஷ் . ஹம் , நிமுத்துங்க

அடை அவியல் ஒரு நல்ல கூட்டணி , எனக்கு பிடிச்சது
அதுதான்.

இணைக்கு எங்க வீட்ல அதுதான், உங்க வீட்ல ..... அதானே
செஞ்சு பாத்து  சொல்லுங்க


நாட்டில் அடைமழை பெய்யாவிடினும் , வீட்டில்
அடை(மழை) நிச்சயம் உண்டுங்க





No comments:

Post a Comment