தினசரி தியானம்
விழிப்பு
பேரறிவே, உன்னைப் போற்றுதற்கு நான் உறக்கத்தினின்று விழித்து எழுந்திருப்பேனாக.
அஞ்ஞானத்தில் அழுந்திக் கிடப்பது உறக்கத்துக்கு ஒப்பானது. இந்திரியங்களின் வசப்பட்டுக் கிடப்பது உறக்கத்துக்கு ஒப்பானது. அப்படி எண்ணிறந்த பிறவிகள் போய்விட்டன. ஆத்ம போதத்தில் விழித்து எழுந்திருப்பதே உண்மையான விழிப்பு.
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
-மாணிக்கவாசகர்
No comments:
Post a Comment