திருப்பதி திருக்குடை புறப்பாடு
சென்னை தாம்பரத்தில் இருந்து திருப்பதி திருமலையை நோக்கி
திரு திருப்பதி குடைகள் நேட்று காலை பதினோரு மணியளவில்
ஸ்ரீ ராமானுஜர்படத்தயாரிப்பாளர் திரு டி கிருஷ்ணன் அவர்களால்
துவைக்கி வைக்கப்பட்டு வீதி வழியான நடைப்பயண புறப்பாடு
துவக்கி வைக்கப்பட்டடது.
இந்த வைபவத்திற்கு ஸ்ரீ ராமானுஜர் படத்தயாரிப்பாளர் திரு
நல்லான் சக்கரவர்த்தி அவர்கள் தலைமையேற்று துவங்கி வைத்தார்.
இந்த குடை பூந்தமல்லி , திருமழிசை , திருவள்ளூர், திருப்பதி
திருமலையை கருடசேவை உற்சவத்தன்று சென்று அடையும்
இதில் விசேஷமான நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் , இந்த குடை
பூந்தமல்லி சென்றடைந்து அங்கிருந்து தரை வழி வாகன
வசதி மூலம் திருமலையை சென்று அடையும் . இந்த ஆண்டு
சிறப்பு அம்சமாக , சென்னையிலிருந்து , திருமலையை
பாத யாத்திரையாக விழா குழுவினரும் பக்தர்களும் எடுத்து
சென்று சேர்க்க முடிவு செய்தது அவ்வண்ணமே செயல் படுத்த
உள்ளனர்.
இந்த தகவல்களை திருப்பதி திருக்குடை உற்சவ அமைப்பு
விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
"திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் நேரும் ஐயா "

No comments:
Post a Comment