Wednesday, December 25, 2013

நெய் நந்தீஸ்வரர்



நெய் நந்தீஸ்வரர்


புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி எனும் ஊருக்கு தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர் வேந்தன்பட்டி. இங்கே நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த ஆலயத்தில் மீனாட்சி சமேத சொக்கலிங்கேஸ்வரர் அருள்புரிகிறார்.

விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவகிரகங்கள் எழுந்தருளினாலும் நெய்நந்தீஸ்வரரே இவ்வாலயத்தின் சிறப்பு. நந்திகோவில் என்றே இவ்வாலயத்தை பக்தர்கள் அழைக்கின்றனர். சிவனாரின் சந்நிதியை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கின்றார் நெய் நந்தீஸ்வரர். இவரின் மேனி முழுவதும் பசு நெய் உறைந்திருக்கிறது. எவ்வளவுதான் நெய் பூசினாலும் இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில்லை என்பது அதிசயம். பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் நெய்நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment