தினம் ஒரு திருப்புகழ் - வீணாள் படாதருள் - நாள் - 24
ராகம் :- சங்கராபரணம் தாளம்: சதுஸ்ர ரூபகம்
கொம்பனை யார்காது மோதிரு
கண்களி லாமோத சீதள
குங்கும பாடீர பூஷண ...... நகமேவு
கொங்கையி னீராவி மேல்வளர்
செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே
உம்பர்கள் ஸ்வாமிந மோநம
எம்பெரு மானேந மோநம
ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும்
உன்புக ழேபாடி நானினி
அன்புட னாசார பூசைசெய்
துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே
பம்பர மேபோல ஆடிய
சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி
பங்கமி லாநீலி மோடிப
யங்கரி மாகாளி யோகினி
பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண்
டெம்புதல் வாவாழி வாழியெ
னும்படி வீறான வேல்தர
என்றுமு ளானேம நோகர ...... வயலூரா
இன்சொல்வி சாகாக்ரு பாகர
செந்திலில் வாழ்வாகி யேயடி
யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே.
கருத்துரை:- உமா தேவியார் வாழ்த்து கூற, வெற்றிவேலைத்
தான்கியுள்ளவரே! நித்தியரே! மனோகர மாணவரே! வயலூரில்
எழுந்தருளியவரே! கிருபாகரே! திருச்செந்தூர் அதிபதியே!
விலை மகளிரது கண்கள், தனங்கள், கரிய கூந்தல், அழகிய உடல்
என்பனவற்றைக் கண்டு மருளாமல், தேவரீரது திருப்புகழையே பாடி,
அன்புடனும், ஆசாரத்துடனும் பூஜித்து, வீணாள் பாடாமல் உயந்திடத்
திருவருள் புரிவீராக!
தொடரும் திருப்புகழ் ...................................................... தொடர்ந்து வாருங்கள்
No comments:
Post a Comment