Saturday, December 28, 2013

தினம் ஒரு திருப்புகழ் - வழிபட

தினம் ஒரு திருப்புகழ் - வழிபட   - நாள்  - 42





ராகம்: வராளி                     தாளம்: சதுஸ்ர ஏகம் 

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு ...... முறவோரும்
அடுத்த பேர்களு மிதமுறு மகவோடு ...... வளநாடும்

தரித்த வூருமெ யெனமன நினைவது ...... நினையாதுன்
தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது ...... தருவாயே

எருத்தி லேறிய இறையவர் செவிபுக ...... வுபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமக ...... ளிருபாதம்

பரித்த சேகர மகபதி தரவரு ...... தெய்வயானை
பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை ...... பெருமாளே.



கருத்துரை: சிவபெருமான் செவியில் பிரணவத்தின் உட்பொருளை 
உபதேசித்தருளியவரே! வள்ளியின் கனவா! தெய்வ குஞ்சரி மணவாளா! 
பன்னிரு புயத்தை உடையவரே! பழனியில் வாழ்பவரே! மனைவியையும்,
மக்களையும், சுற்றத்தாரையும், நண்பர்களையும், வளமிக்க நாட்டையும், 
தொண்டைத் தந்து அருள் புரிய வேண்டும் 



தொடரும் திருப்புகழ் .................................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment