ஓ ! இட் இஸ் பணியாரம்!!! ஓட்ஸ் பணியாரம்
By Velammal Gurusamy
பள்ளியிலிருந்து வீடுதிரும்பி வந்த குழந்தை மம்மி பசிக்குது
என்பாள்.
லஞ்ச் சாப்பிட்டாயா என்று கேட்டால்?
கொஞ்சம் சாப்பிட்டேன் என்பாள் .
தினமும் எல்லோர் வீட்டிலும் நடக்கும் நிகழ்ச்சிதான்.
சரி சரி கைகால் கழுவிட்டு ட்ரெஸ் மாத்திட்டுவா உனக்கொரு
சர்பிரைஸ் காத்திருக்கு என்றுசொன்னால் ,சொன்ன வேலையை செய்துவிட்டு ஓடிவந்து டைனிங் டேபிள் மேல் இருப்பதைப்-
பார்த்துவிட்டு ,
ஓ !இட் இஸ் பணியாரம். சந்தோஷத்தில் சாப்பிட
ஆரம்பிக்கிறது குழந்தை. தாயின் மனம் பூரிக்கிறது.
எப்படி செய்வது , கொஞ்சம் பார்க்கலாமா
பணியாரம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
நான் ஒருகப் ஓட்ஸை லேசாகவறுத்து ,பொடித்து ,
அதோடு அரைக்கப் பொடித்த வெல்லம்,ஒரு பழம் ,
சிறிது ஏலப்பொடி ,தேவையான அளவு பால் சேர்த்து
கரைத்து சிறிது நேரம் ஊறவைத்து .நெய்விட்டு பணியாரங்களாக சுட்டெடுத்தேன்.
சாப்பிட சுவை, குழந்தைகளின் கொண்டாட்டம்,
தாயின் குதூகலம் .அதுதான் ஓட்ஸ் பணியாரம்.
ஓடி பிடித்து விளையாடும் குழந்தைகளை
ஓட்ஸ் பலகாரங்கள் கொண்டு கட்டி போடுங்கள்
No comments:
Post a Comment